செல்போன் - இண்டர்நெட்டை பயன்படுத்தாத அஜித்தோவல்.. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பகிர்ந்த ரகசியம்
டெல்லி: தற்போது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன், இண்டர்நெட் வசதிகளை பயன்படுத்துகின்றன. ஆனால் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல் செல்போன் மற்றும் இண்டர்நெட் பயன்படுத்துவது கிடையாது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலுமாக உண்மை. இதுபற்றி அஜித் தோவலே விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் ‛விக்சித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக்' என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்று ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது ஒருவர், ‛‛தற்போது செல்போன்கள் மற்றும் இண்டர்நெட் பயன்பாடு மக்களிடம் அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் நீங்கள் எப்படி மற்றவர்களுடன் தொடர்பில் உள்ளீர்கள்'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு அஜித் தோவல், ‛‛நான் செல்போன்கள் பயன்படுத்துவது இல்லை என்பதை எப்படி நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. யெஸ். உண்மை தான். செல்போன், இண்டர்நெட் இல்லாமல் என்னால் சமாளிக்க முடிகிறது. பொதுமக்களுக்கு தெரியாத பிற தகவல் தொடர்பு வழிகள் உள்ளன.
அதேவேளையில் பர்ஷனல் விஷயங்கள் தவிர்த்து பிறவற்றுக்கு நான் செல்போன் மற்றும் இண்டர்நெட்டை பயன்படுத்துவது இல்லை.சில நேரங்களில் வெளிநாட்டில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள வேண்டி இருக்கும். அப்போது அதனை பயன்படுத்துவேன்'' என்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் அஜித் தோவல் பேசினார்.
அப்போது அவர், ‛‛இந்த நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்று பேசினார். ‛‛தாக்குதல்கள் மற்றும் அடிமைத்தனத்தின் வேதனை நிறைந்த வரலாற்றிற்கு 'பழிவாங்குவதற்காக' மட்டுமின்றி பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு உட்பட அனைத்து துறைகளிலும் நாம் வலுப்படுத்தி கொள்ள வேண்டும். உண்மையில் நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலி. சுதந்திர இந்தியாவில் பிறந்துள்ளீர்கள். இந்த சுதந்திரம் என்பது சுதந்திர போராட்ட வீரர்களி்ன தியாகத்தால் கிடைத்துள்ளது.
நான் ஆங்கிலேயேர் ஆட்சியின்போது பிறந்தேன். பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். சுபாஷ் சந்திர போஸ் தனது வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டார். மகாத்மா காந்தி சத்தியகிரக போராட்டங்களை நடத்தினார். இப்படி நமது முன்னோர்கள் பாடுபட்டு தியாகம் செய்து நம் நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளனர்'' என்று கூறியிருந்தார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications