Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.40 கோடிக்கு வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்ட பிபிசி? பரவும் தகவல் உண்மையா? வருமான வரித்துறை பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் தொடர்பான சர்ச்சைக்கு நடுவே பிபிசி அலுவலகங்களில் 3 நாட்கள் வருமான வரி சோதனை நடந்தது. இதற்கிடையே தான் ரூ.40 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததை பிபிசி நிறுவனம் ஒப்புக்கொண்டதாக தகவல் பரவி வரும் நிலையில் தான் தற்போது அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஊடக சேவை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிபிசி செய்தி நிறுவனம் பிரதமர் மோடி குறித்த 2 ஆவணப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது.

IT official denies reports of BBC admitting to tax evasion and under reporting of income by Rs.40 cr through email

2002 குஜராத் கலவரம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமைச் சட்டம் உட்பட முஸ்லீம்களுக்கு எதிராக பிரதமர் மோடி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அந்த ஆவணப்படத்தில் பிபிசி பதிவு செய்தது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் பல இடங்களில் தடையை மீறி ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இதற்கிடையே தான் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி மாதம் வருமான வரித்துறையினர் நுழைந்து அதிரடியாக ஆய்வு செய்தனர். பிபிசி நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் இந்தியாவில் அந்த நிறுவனம் சார்ந்த முக்கிய விபரங்கள், ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மொத்தம் 3 நாட்கள் பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள், ஊழியர்களிடம் வருமான வரித்துறையினர் தீவிரமாக விசாரித்தனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதாவது பிரதமர் மோடி குறித்த பிபிசி செய்தி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்ததால் வருமான வரித்துறை மூலம் மிரட்டல் விடுக்கப்படுவதாக சாடினர். இது அந்த சமயத்தில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது. அதன்பிறகு இந்த விவகாரம் அமைதியானது. இதற்கிடையே தான் இந்த சோதனையின்போது பிபிசி தனது வருமானத்துக்கு ஏற்ப வரி செலுத்தவில்லை எனவும், ஆய்வில் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகின.

IT official denies reports of BBC admitting to tax evasion and under reporting of income by Rs.40 cr through email

இதன் தொடர்ச்சியாக தான் தற்போது கடந்த 2 நாட்களாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதாவது பிபிசி ரூ.40 கோடி வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இதனை பிபிசி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் 2 நாட்களாக பரவி வருகிறது. மேலும் இதுதொடர்பாக பிபிசி நிறுவனம் வருமான வரித்துறைக்கு இ-மெயில் அனுப்பி உள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. இதனால் மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது.

இந்நிலையில் தான் பிபிசி தனது இந்திய வருமானத்தை ரூ.40 கோடி அளவுக்கு குறைத்து வரிஏய்ப்பு செய்ததா? இல்லையா? என்பது குறித்து இந்தியன்எக்ஸ்பிரஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐடி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛வருமான வரித்துறையை பொறுத்தமட்டில் இ-மெயில் இயக்க நடைமுறை என்பது இல்லை. ஆய்வில் கிடைக்கும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு சட்டப்பூர்வமான செயல்முறை உள்ளது.

வரி செலுத்துவார் தங்களின் தவறை உணர்ந்து கொண்டாலும் கூட இந்திய வரிச்சட்டங்கள் அவர்களுக்கு எந்த வகையிலும் மன்னிக்காது. ஏனென்றால் வரிகள் ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டும். இதனால் திருத்தப்பட்ட வருமானத்தை காட்டி மீண்டும் வரி செலுத்த முடியாது. மாறாக வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு அவர்கள் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் '' என்றார்.இதன்மூலம் ரூ.40 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்ததாக பிபிசி நிறுவனம் இ-மெயில் அனுப்பி ஒப்புக்கொண்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என இந்த அதிகாரி தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+