டபுள் கேம் ஆடிய பாகிஸ்தான்.. மரண அடி கொடுத்த ஆப்கான்.. அமைச்சர் ஜெய்சங்கர் பகிர்ந்த முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பயங்கரவாதத்தை வளர்த்தெடுக்கும் ஒரு இடமாகவே பாகிஸ்தான் இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எப்போதும் மோதல் போக்கே இருந்து வந்துள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் விவகாரம் பாகிஸ்தானுக்கு எப்படி எதிராகத் திரும்பியது என்பது குறித்தும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றம் குறித்தும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள சரோதர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வீழ்ந்தது எப்படி என்பது குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

Jaishankar said that Pakistan Played a Double Game with Taliban

ஜெய்சங்கர்

தாலிபான்களிடம் பாகிஸ்தான் டபுள் கேம் ஆடியதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இதன் மூலம் பாகிஸ்தான் அதன் சொந்த வஞ்சக வலையில் சிக்கிக் கொண்டது என்றும் இதனாலேயே ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வீழ்ந்ததாகக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தான் டபுள் கேம் ஆடியது. தாலிபான்களுக்கு ஆதரவாகவும் இருந்தனர்.. தாலிபான்களுக்கு எதிராக உள்ளவர்களுக்கும் ஆதரவளித்தனர்.

டபுள் கேம்

பல ஆண்டுகள் அவர்கள் இதே நிலைப்பாட்டில் தான் இருந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையை வெளியேறிய போது அவர்களால் டபுள் கேமை தொடர முடியவில்லை. அந்தப் பிராந்தியத்தைப் பயங்கரவாதிகளுக்கான தொழிற்சாலையாக மாற்றியதே பாகிஸ்தான் நாடுதான். டபுள் கேம் ஆடியபோது அவர்களுக்குக் கிடைத்த எல்லா நன்மையும் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறிய அடுத்த நொடியே சரிந்தது. அவர்கள் இத்தனை காலம் வளர்த்த பயங்கரவாத தொழிற்சாலையே அவர்களுக்கு எதிராக மாறிவிட்டது.

மும்பை தாக்குதல்

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தான் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு மிக மோசமாக மாற காரணம். இரு நாட்டு உறவு அப்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு அது மேம்படவே இல்லை. அண்டை நாடாக இருந்த கொண்டு இதுபோல நடந்து கொள்வதை இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை இந்தியா அப்போது தான் உணர்ந்தது. ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் மனநிலை அதுவாகத்தான் இருந்தது. ஆனால், அப்போதிருந்த அரசுக்கு அது புரியவில்லை. ஆனால், அதைப் பற்றி நாம் இப்போது பேசத் தேவையில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த மாற்றங்கள் குறித்துப் பேசிய ஜெய்சங்கர், "இந்தியா மாறிவிட்டது. பாகிஸ்தானும் மாறிவிட்டதாகச் சொல்ல வேண்டும் என எனக்கும் ஆசைதான்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்னுமே அவர்களுக்குப் பல கெட்ட பழக்கங்கள் இருக்கவே செய்கிறது. 2014ல் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்தால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது

இந்தியா பாகிஸ்தான் வேறுபாடு

இந்தக் காலகட்டத்தில், நாமும் (இந்தியா) பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வளர்ந்துள்ளோம். உலக அரங்கில் நமது அந்தஸ்து பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்குப் பழைய நிலை தான் தொடர்கிறது. இந்தியா இப்போது முன்னேறியுள்ள நிலையில், இந்தியர்கள் இனியும் பாகிஸ்தானுக்காகத் தங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்கத் தேவையில்லை" என்றார்.

முன்னதாக மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தஹாவூர் ராணா என்பவர் சமீபத்தில் தான் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக நாடுகடத்தப்பட்டிருந்தார். இது தொடர்பாகப் பேசிய ஜெய்சங்கர், "இந்தியா அமெரிக்கா இடையே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மிகச் சிறப்பாக இருக்கிறது.. 26/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய இது முக்கியமான நடவடிக்கை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+