ஜம்மு காஷ்மீருக்கு இறையாண்மை கிடையாது-இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு தற்காலிகமானதுதான்; ஜம்மு காஷ்மீருக்கு இறையாண்மை என்பது கிடையாது; இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் ஜம்மு காஷ்மீர் என உச்சநீதிமன்ற தீர்ப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது ரத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

- ஜனாதிபதி நடவடிக்கைகள் நீதிமன்ற ஆய்வுக்குரியது
- மாநில அரசு அதிகாரத்தை மத்திய அரசு செயல்படுத்த முடியாது-
- காஷ்மீர் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக மனுதாரர்கள் குறிப்பிடவில்லை-
- மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கேள்விக்குரியது இல்லை-
- ஜம்மு காஷ்மீருக்கு "இறையாண்மை" என்பது கிடையாது
- ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு என்பது தற்காலிகமானது; அப்போதைய போர் சூழ்நிலைக்காக உருவாக்கப்பட்டதுதான்.
- ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே
ஜம்மு காஷ்மீர் மகாராஜாவுடனான ஒப்பந்தத்தின் போது இந்தியாவின் அரசியல் சாசனம் இறுதியானது என ஒப்புக் கொண்டார்
- இந்தியாவுடன் இணைந்த போதே ஜம்மு காஷ்மீர் இறையாண்மையை இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டது.












Click it and Unblock the Notifications