பொறியியல் படிப்புகளுக்கான.. ஜேஇஇ 3ம் கட்ட நுழைவு தேர்வில் மாற்றம்.. புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு
டெல்லி: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் நுழைவு தேர்வின் மூன்றாவது கட்ட தேர்வுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 20 முதல் 25 தேதி வரை நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 20, 22, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. மாணவர்களின் வசதிக்காக இந்த கல்வியாண்டில் ஜேஇஇ தேர்வுகள் 4 கட்டங்களாக பிரித்து நடத்தப்படுகின்றன.இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட ஜேஇஇ தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. முதல் இரண்டு கட்ட தேர்வுகள் முடிந்த நிலையில் 3 மற்றும் 4ம் கட்ட தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி மூன்றாவது கட்ட தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் ஜூலை மாதம் தள்ளி வைக்கப்பட்டது.
ஜூலை 20 - 25 தேதி வரை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது ஜூலை 20, 22, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மூன்றாம் கட்ட தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கொரோனா காலம் என்பதால் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 232ல் இருந்து 334 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல் தேர்வு நடக்கும் மையங்களின் எண்ணிக்கை 660ல் இருந்து 828 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 7,09,519 பேர் மூன்றாம் கட்ட தேர்வை எழுத உள்ளனர்.
பொறியியல் படிப்புகளுக்கான நான்காம் கட்ட ஜேஇஇ தேர்வுகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடக்க உள்ளன. கொரோனா விதிகளை பின்பற்றி இந்த ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கான விண்ணப்ப அவகாசம் ஏற்கனவே முடிந்துவிட்டது. மூன்றாம் கட்ட தேர்வு எழுத உள்ளவர்கள் தங்கள் அட்மிட் கார்டை jeemain.nta.nic.in என்ற இணைய பக்கத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications