தீவிரவாதிகளுடன் சிக்கிய காஷ்மீர் போலீஸ் அதிகாரி... டெல்லி குடியரசு தின விழாவில் நாசவேலைக்கு சதியா?
Recommended Video
டெல்லி: ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் சிக்கிய காஷ்மீர் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங், டெல்லியில் குடியரசு தின விழாவில் நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டியிருந்தாரா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்களை படுகொலை செய்த சம்பவங்களில் போலீசாரால் தேடப்பட்ட தீவிரவாதி நவீது பாபு. காஷ்மீரில் சோதனை சாவடி ஒன்றில் காரை சோதனையிட்ட போது நவீது பாபு சிக்கினார்.

அவருடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் மற்றும் இன்னொரு தீவிரவாதியான அல்டாப் ஆகியோர் சிக்கினர். ஏற்கனவே நாடாளுமன்ற தாக்குதலில் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங் தொடர்பு குறித்து, 2013-ல் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு தமது வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருந்தார்.
2001-ல் நாடாளுமன்றத்தை பயங்கரவாதிகள் தாக்கிய போது அவர்களுக்கு டெல்லியில் தங்கி உதவி செய்ய அப்சல் குருவை அனுப்பி வைத்ததே தாவிந்தர் சிங் என்பது அவரது வாக்குமூலம். ஆனால் தாவிந்தர் சிங் மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
இந்நிலையில் 2 தீவிரவாதிகளுடன் தாவிந்தர் சிங் டெல்லி நோக்கி சென்ற நிலையில் பிடிபட்டுள்ளார். டெல்லியில் குடியரசு தின ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விழாவை சீர்குலைக்கும் சதித் திட்டத்துடன்தான் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங், தீவிரவாதிகளை டெல்லிக்கு அழைத்து செல்ல முயன்றிருக்கலாம் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். தாவிந்தர் சிங்கிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications