விடுதி காவலரை தாக்கிவிட்டனர்.. ஜேஎன்யூவின் மாணவர் சங்க தலைவர் உட்பட 19 பேர் மீது எப்ஐஆர் பதிவு!
டெல்லியில் போலீஸ் ஜேஎன்யூயின் மாணவர் சங்க தலைவர் ஐஷே கோஷ் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் போலீஸ் ஜேஎன்யூயின் மாணவர் சங்க தலைவர் ஐஷே கோஷ் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அங்கு விடுதி காவலரை தாக்கியதாக மேலும் 19 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
நேற்று முதல்நாள் மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் மாணவர்கள் மிக மோசமாக காயம் அடைந்தனர். சில மாணவர்கள் இதில் மிக மோசமாக தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆனால் என்ன
ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை அடையாளம் தெரியாத நபர்கள் மீது மட்டும்தான் புகார் பதியப்பட்டு இருக்கிறது. அந்த அடையாளம் தெரியாத நபர்கள் யார் என்று இணையத்தில் நிறைய ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. குற்றவாளிகள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது இல்லை
ஆனால் இதில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஒருவர் மீது கூட நேரடியாக இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது டெல்லியில் போலீஸ் ஜேஎன்யூயின் மாணவர் சங்க தலைவர் ஐஷே கோஷ் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

வழக்கு
இவர் மீது ஜேஎன்யூவின் விடுதி பாதுகாவலவரை தாக்கியதாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு இருந் சர்வர் அறையை கடந்த 4ம் தேதி இவர் தாக்கியதாகவும் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது உள்ளது. அதற்கு மறுநாள் 5ம் தேதிதான் ஜேஎன்யூவில் இடதுசாரிய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்தது.

எத்தனை பேர்
இந்த எப்ஐஆர் அவர் மீது மட்டும் பதியபடவில்லை. காவலரை தாக்கியதாக மேலும் 19 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அனைவரும் இடதுசாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு பதியப்பட்டு இருக்கும் 19 பேரில் ஐஷே கோஷ் உட்பட 15 பேர் மருத்துவமனையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications