டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம்- பல்கலை.யில் பல மணிநேரம் மத்திய அமைச்சர் பொக்ரியால் தவிப்பு!
Recommended Video
டெல்லி: எப்போதும் இல்லாத அளவுக்கு 300% விடுதி மற்றும் கல்வி கட்டண உயர்வால் இனி படிக்கவே முடியாத நிலை உருவாகும் என்கிற அச்சத்தால் டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் எத்தனையோ துறைசார் அறிஞர்களை தேசத்துக்குக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் மக்களுக்காக குரல் எழுப்பவும் சிந்திக்கவும் கூடிய மகத்தான மனிதர்களை தந்திருக்கிறது.

சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய குடும்பங்களின் மாணவர்களும் உதவித் தொகை உள்ளிட்டவைகளுடன் ஜே.என்.யூவில் படித்து வல்லுநர்களாகி இருக்கின்றனர். இந்நிலையில்தான் தங்களது கல்வி மற்றும் விடுதி கட்டணங்களின் அபரிதமான உயர்வு, உடை கட்டுப்பாடு, போராடும் மாணவர்களுக்கான அபராத தொகை உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி இன்று காலை முதல் டெல்லியில் போராடி வருகின்றனர் மாணவர்கள்.
அதுவும் விடுதி, கல்வி கட்டணம் 300% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏறத்தாழ 40% மாணவர்கள் கல்வியை தொடரவே முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த பின்தங்கிய குடும்ப மாணவர்கள் இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து முறையிட முயன்றனர்.
ஆனால் அந்த மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் மாணவர்கள் குதித்தனர்.
இப்போராட்டத்தை ஒடுக்க டெல்லி போலீசாரும் சி.ஆர்.பி.எப். படையினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஒருகட்டத்தில் தண்ணீரை பீய்ச்சியும் அடித்தனர். ஆனாலும் தங்களது எதிர்காலத்துக்கானது என்பதால் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் டெல்லி போலீசார் எப்படி கட்டுப்படுத்துவது என திணறி வருகின்றனர்.
போராட்டத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்
மாணவர்கள் வாயிலை மறித்து போராட்டம் நடத்தியதால் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. விழா முடிந்த பின்னரும் சில மணிநேரங்கள் அமைச்சர் பொக்ரியால் பல்கலைக் கழகத்துக்குள்ளேயே காத்திருக்க நேரிட்டது. மாணவர்களை பெரும் முயற்சிக்குப் பின் அப்புறப்படுத்தி அமைச்சர் பொக்ரியாலை போலீசார் அனுப்பி வைத்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications