Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

14 திருத்தங்களுடன்.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை இறுதி செய்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு நாடாளுன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 14 திருத்தங்களுடன் இந்த மசோதாவிற்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த அனைத்து பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. வக்பு வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்தல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

வக்ஃப் சட்டம், 1995ல் திருத்தம் கொண்டுவரும் புதிய மசோதாவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தார்.. பெரும்பாலும் சட்டங்களில் திருத்தம் செய்தால் ஒன்று, இரண்டு திருத்தங்களை மேற்கொள்ளப்படும். அதிகபட்சம் 10 திருத்தங்கள் கூட செய்யப்படுவது வழக்கம்.

waqf board delhi parliament

ஆனால் 44 திருத்தங்களுடன், வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் சட்டமான வக்ஃப் சட்டத்தில் உள்ள பல ஷரத்துகளை ரத்து செய்ய வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமிய பெண்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது உட்பட, பல மாற்றங்களை இந்த சட்டத்தில் செய்யப்பட்டு இருந்தது. மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இந்த சட்ட மசோதாவை ஆய்வு நாடாளுமன்ற் கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவிற்கு பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைவராக இருந்தார்.

இந்தக் குழுவில் நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த குழுவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 16 எம்பிக்களும் எதிர்க்கட்சிகளுக்கு 10 எம்பிக்களும் உள்ளனர்.

14 திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதற்கான வாக்கெடுப்பு வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு வரும் 31 ஆம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். முன்னதாக இந்த குழு, தனது அறிக்கையை நவம்பர் 29 ஆம் தேதி சமர்பிக்க இருந்தது. எனினும், இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 13 வரை நீட்டிக்கப்பட்டது. அதவது பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாள் வரை நீட்டிக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறியதாவது:- 44 திருத்தங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக விரிவான ஆலோசனை நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களிடமும் திருத்தங்கள் கோரினார்கள். இன்று நடைபெற்றதுதான் இறுதி ஆலோசனைக் கூட்டம். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.எதிர்க்கட்சிகளும் திருத்தங்களை பரிந்துரைத்தார்கள். அனைத்தும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் விழுந்தன" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+