பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு!
Recommended Video
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்படார். அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி 2014-ல் அதிகாரத்தை கைப்பற்றியது, அப்போது பாஜகவின் தலைவராக ராஜ்நாத்சிங் இருந்தார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத்சிங் உள்துறை அமைச்சரானார்.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் புதிய தேசிய தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டார். 2019 லோக்சபா தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.

புதிய தலைவர்
பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் பாஜக தலைவரான அமித்ஷா, உள்துறை அமைச்சரானார். இதனால் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பாஜக செயல் தலைவர்
இதன் முதல் கட்டமாக பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாஜகவின் உட்கட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டன.

பாஜக தேர்தல்கள்
பாஜகவின் மாநில தலைவர்கள் ஒன்று கூடிதான் தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக காலியாக இருந்த பாஜகவின் மாநில தலைவர் பதவிகள் நிரப்பப்பட்டன.

இன்று வேட்புமனு
பின்னர் பாஜகவின் தேசிய தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் வெளியிட்டார் அதில், தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெறும்; வேட்புமனுக்கள் பரிசீலனை, திரும்பப் பெறுதல் அனைத்தும் பகல் 2.30 மணிக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் ஜேபி நட்டா
இதனடிப்படையில் ஜே.பி. நட்டா இன்று பாஜக தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருக்காக பாஜக மூத்த தலைவர்கள் பலரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். பின்னர் பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications