ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு.. தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தாக்கல் செய்த வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது அவதூறு பரப்பியோர் மீது தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றம் அதிரடியான கேள்விகளை கேட்டதோடு, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் ஜிஎஸ் மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‛‛திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பிறகு ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

ஜிஆர் சுவாமிநாதன் மீது யூடியூபர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு அமைப்பினர் ஜிஆர் சுவாமிநாதனை விமர்சனம் செய்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் அவதூறு கருத்துகள். மேலும் நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயே ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். இது நீதித்துறையின் சுதந்திரத்தை தடுக்கும் செயல்முறை. எனவே உடனடியாக உச்சநீதிமன்றம் தலையீடு செய்ய வேண்டும்.
ஏனென்றால் இந்த விவகாரத்தில் உடனடியாக தமிழக அரசு தலையிட வேண்டும் என்று புகார்கள் வழங்கப்பட்டது. ஆனால் காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உச்சநீதிமன்றம் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், பிரசன்னா பி வரலே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛‛ஒரு நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது என்றால் அதனை ஏன் அரசு தடுக்கவில்லை? தமிழக அர[சு மவுனம் சாதிக்கிறதா?. நீதிபதி ஒரு வழக்கில் தீர்ப்பை வழங்குகிறார் என்பதற்காக அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது என்பது ஏற்கக்கூடியது அல்ல. இதனை உறுதியாக கூறுகிறோம். இவ்வளவு புகார்கள் வழங்கியுள்ளோம் என்று மனுதாரர் சார்பில் தேதி வாரியாக ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் விவகாரத்தில் நீதிபதி குறித்து அவதூறு பரப்பியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தமிழ்நாடு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் இந்த விவகாரம் பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications