உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் என் வி ரமணா.. அயோத்தியா முதல் காஷ்மீர் வழக்கு வரை... யார் இவர்?
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது எஸ்.ஏ போப்டே உள்ளார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அவருக்குப் பின் அடுத்த தலைமை நீதிபதியாக யார் பதவியேற்பார் என்பதில் பெரும் கேள்வி நிலவியது.

அடுத்த தலைமை நீதிபதி
கடந்த மாதம் தனக்குப் பின் என்.வி ரமணாவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக போப்டே பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் இந்த பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

யார் இந்த என் வி ரமணா
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள என்.வி. ரமணா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ரமணா வரும் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை ஒரு வருடம் நான்கு மாதங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.

நதி நீர் சட்டங்கள்
என்.வி. ரமணா சுமார் 40 ஆண்டுகள் நீீதித்துறையில் அனுபவம் கொண்டவர். ஆந்திர உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில தீர்ப்பாயங்கள் பலவற்றிலும் அவர் இருந்துள்ளார். அரசியலமைப்பு, குற்றவியல், சேவை மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதி சட்டங்களில் என்.வி. ரமணா நிபுணத்துவம் பெற்றவர். காஷ்மீரில் இணையச் சேவையை மீண்டும் வழங்க உத்தரவிட்ட அமர்வில் இடம் பெற்றிருந்தவர் என்.வி. ரமணா. இதுதவிர அயோத்தியா வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளிலும் நீதிபதியாக இருந்தவர் என்.வி. ரமணா.

கடந்து வந்த பாதை
கடந்த 2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி ஆந்திரா உச்ச நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013 மார்ச் 10 முதல் 2013 மே 20 வரை செயல்பட்டார். அதைத்தொடர்ந்து ஓர் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். 2014ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வருகிறார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications