டெல்லியில் மலரும் தாமரை..ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிக்கும் பாஜக.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 39 முதல் 45 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று ஜேவிசி சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது.

delhi exit polls 2025 delhi election exit poll results

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் பிப்ரவரி 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியை பொறுத்தவரை மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி உள்ளது. தேர்தல் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஜேவிசி சார்பில் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி டெல்லியில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 39 முதல் 45 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்ற 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அதை விட கூடுதல் இடங்களில் பாஜக வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக அரியணை ஏறும்.

அதேபோல் இந்த கருத்து கணிப்பின்படி ஆளும் ஆம் ஆத்மி கட்சி 22 முதல் 31 இடங்களில் மட்டுமே வெல்லும். காங்கிரஸ் கட்சி 0 முதல் 2 இடங்களிலும், மற்றவர்கள் 0 முதல் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜேவிசி கருத்து கணிப்பு பாஜகவினருக்கு உற்சாகத்தை தந்துள்ளதோடு, ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

டெல்லியில் இதற்கு முன்பு தொடர்ந்து 3 முறை ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. கடந்த 2014, 2015, 2020 ஆகிய சட்டசபை தேர்தல்களில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் 2014ல் மட்டும் பாஜக - ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து இருந்தது. ஆனால் அந்த ஆட்சி உடனடியாக கவிழ்ந்தது. அதன்பிறகு 2015, 2020 சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இப்போது மீண்டும் சட்டசபை தேர்தல் நடந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+