காபூல் இரட்டை குண்டுவெடிப்புக்கு காரணமான ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பில் 14 கேரள இளைஞர்கள்? அதிர்ச்சி தகவல்
டெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புக்கு காரணமாக ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே அமைப்பில் கேரளாவை சேர்ந்த 14 இளைஞர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச பயங்கரவாத அமைப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். கோலோச்சிய காலத்தில் 2014-ம் ஆண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கோரசன் மாகாணம் அதாவது ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே உருவானது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளைக் கொண்டதாக இந்த அமைப்பு உருவானது.
இந்த பயங்கரவாத இயக்கத்தில் தாலிபான்களிடம் இருந்து பிரிந்தவர்களும் இணைந்தனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு இணையான ஒரு அமைப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே அமைப்பு பார்க்கப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை உருவாக்கியது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. என்பது சர்வதேச நாடுகளின் குற்றச்சாட்டு. ஆனால் பாகிஸ்தான் இதனை திட்டவட்டமாக மறுத்தும் வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ்.கே விஸ்வரூபம்
கடந்த ஜூன் மாதம் ஹாலோ என்ற இங்கிலாந்து என்.ஜி.ஓ. அமைப்பின் 10 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதும் இந்த அமைப்புதான். ஷியா பிரிவு முஸ்லிம்களின் காபூல் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்ததும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்..கே அமைப்புதான். ஆப்கானிஸ்தானின் குனார், நாகன்ஹார் மாகாணங்களில் இந்த அமைப்பு வலிமையாக இருக்கிறது. 2020-ம் ஆண்டு காபூல் குருத்வாரா தாக்குதல், காபூல் மகப்பேறு மருத்துவமனை தாக்குதல், ஜலலாபாத் சிறை மீதான தாக்குதல் என தொடர்ந்து கைவரிசைகளை காட்டி வந்தது ஐ.எஸ்.ஐ.எஸ்-கே.

வலிமை குறைந்தது
இந்த இயக்கம் 2019-ல் முழு வீச்சில் செயல்பட்டு மொத்தம் 300க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்களை நடத்தியது. அந்த கால கட்டத்தில் 8,000 பேர் வரை இந்த இயக்கத்தில் இருந்தனர். ஆனால் படிப்படியாக ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே-வின் வலிமை குறைந்து போனது. 2020-ம் ஆண்டில் 11 தாக்குதல்களைத்தான் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே இயக்கத்தால் நடத்த முடிந்தது. கேரளாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கேவில் இருப்பதாக கூறப்பட்டது.
Recommended Video

கேரளா இளைஞர்கள்
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கைகளுக்கு வந்தது. அப்போதே ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பு தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தக் கூடும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் காபூலில் இரண்டு தற்கொலைப் படை தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே நடத்தியது. இதில் சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கேவில் கேரளாவை சேர்ந்த 14 இளைஞர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

என்.ஐ.ஏ. விசாரணை
கேரளாவின் காசர்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தான் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தமது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நான்ஹார் மாகாணத்தில் இருப்பதாக கூறியதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரளாவை சேர்ந்த இந்த இளைஞர்கள் சிலர் குடும்பத்துடன் நான்ஹார் மாகாணத்திலேயே செட்டிலாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மாகாணம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இந்த இளைஞர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications