டெல்லியில் போராடுறவங்க விவசாயிகள் அல்ல.. எல்லாம் பயங்கரவாதிகள்.. முட்டாள்!.. கங்கனா பயங்கர பேச்சு
டெல்லி: டெல்லியில் போராடுபவர்கள் பயங்கரவாதிகள் என சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நடிகை கங்கனா ரனாவத் அவர்களுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட பாப் பாடகி ரிஹான்னாவையும் கடுமையாக சாடியுள்ளார்.
வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் அதை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அது எந்த பலனையும் தரவில்லை.
அன்பு சுஷாந்த்.. திரைப்பட மாஃபியா உன்னை துரத்தியது.. பிறந்தநாளில் கங்கனா உருக்கம்
டிராக்டர் பேரணி
இந்த நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் பேரணியை கலைத்தனர்.
சில மாவட்டங்கள்
இந்த பேரணியால் டெல்லியைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் இன்டர்நெட் போன்ற இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தியை பார்த்துவிட்டு பாப் பாடகி ரிஹான்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
கங்கனா
அதில் நாம் ஏன் இதை பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இவரது இந்த பதிவு, அதாவது விவசாயிகளின் போராட்டம் வெளிநாட்டினரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவருக்கு கங்கனா ரனாவத் ஒரு பதில் கொடுத்துள்ளார். இதற்காக கங்கனாவை பலர் கழுவி கழுவி ஊற்றியுள்ளார்கள்.
பயங்கரவாதிகள்
அவர் கூறுகையில் டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் இந்தியாவை பிளவுப்படுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். இதனால் பாதிக்கப்படக் கூடிய நமது தேசத்தை சீனா கையகப்படுத்தி, அமெரிக்காவைப் போன்ற ஒரு சீன காலனியாக மாற்ற முடியும். முட்டாள்... நாங்கள் உங்களை போல எங்கள் தேசத்தை விற்கவில்லை என கங்கனா தனது ட்விட்டரில் ரிஹான்னாவை விமர்சித்துள்ளார்.