ஏமாற்றம்.. ஏமாற்றம்.. ஏமாற்றம்.. விவசாயிகளைப் பற்றி பேசாத மத்திய பட்ஜெட்.. கனிமொழி அட்டாக்!
டெல்லி: சட்டசபைத் தேர்தலால் கூட மத்திய பாஜக அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நினைவு கூட வைக்க முடியவில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை மாற்றம் இல்லாத ஏமாற்றம் என்று கூறியுள்ள கனிமொழி, தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெறாது என கருதுவதால் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான சிறப்பு திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொதிகை மலையேற்றம், ஆதிச்சநல்லூர் கண்காட்சி மையம், கனிம வளங்களுக்கான வழித்தடம், 2 புதிய ரயில் பாதை வழித்தடம் ஆகியவை மட்டுமே அறிவிக்கப்பட்டது.

புதிய திட்டமோ, புதிய தொழிற்சாலைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் தமிழ்நாட்டு மக்களை மத்திய பட்ஜெட் ஏமாற்றி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், ஏமாற்றம்.. ஏமாற்றம்.. ஏமாற்றம்.. அதுதான் இந்த பட்ஜெட்.. இதில் திருக்குறளும் இல்லை.. திட்டங்களும் இல்லை. எந்த அடிப்படையும் இல்லாமல், விவசாயிகள் பற்றி பேசாத பட்ஜெட்டாக உள்ளது.
நிதிக்குழு அறிக்கையில் 50 சதவிகித நிதியை மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கணக்கில் கூட எடுத்துக் கொள்ளாமல் 41 சதவிகித நிதி என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது மாநிலங்களுக்கு எதிரான ஒன்றாகும். ஜல் ஜீவம் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.
ஆனால் அதனையும் குறைத்திருக்கிறார்கள். மாநிலங்களுக்கு எதிரான பல்வேறு விஷயங்களை கொண்டிருக்கும் பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு எந்த நிதியையும் தராமல், நமது அரிய வகை கனிம வளங்களை சுரண்டுவதற்கான திட்டம் தீட்டக் கூடிய பட்ஜெட்டாக உள்ளது. தேர்தலை முன்னிட்டாவது ஏதாவது செய்வார்கள் என்று விரும்பினோம்.
மக்களை இந்த பாஜக அரசு ஏமாற்றி இருக்கிறது. தேர்தல் என்று வரும் போது இதனை எடுத்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால் திமுகவுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி முக்கியம். இது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அநீதி. பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களிப்பது என்பது என்றுமே நடக்காத ஒன்று. பீகார் தேர்தல் வரும் போது, அது பீகார் பட்ஜெட்டாக இருந்தது.
என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் நாம் வெற்றிப் பெறப் போவதில்லை. அதனால் தமிழ்நாட்டை கண்டுகொள்ள வேண்டியதில்லை என்பதோடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களையும் பாஜக புறக்கணித்துள்ளது. அரிய வகை கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தாரை வார்க்க போகிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்தவர்களை, தேர்தலின் போது மக்களும் மறந்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்! -
கடைசியில் ஒரு வழியா வருது.. சென்னை லூலூ மால்.. தொடங்குது கட்டுமானம்.. எங்கே வருது தெரியுமா? -
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி!












Click it and Unblock the Notifications