கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லி: கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இங்கு காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று தெரிகிறது. பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக இருந்தது. அங்கு சட்டசபை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது.
5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19ம் தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும்.
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என உறுதியாக கூறப்படுகிறது. இங்கு ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதேபோல் கன்னியாகுமரியில் எப்போதும் வலுவாக இருக்கும் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications