கர்நாடகாவில் நாளை பந்த் எதிரொலி- மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு- பெங்களூருவில் காலை முதல் அமல்!
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு திடீரென அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் நாளை காலை 6 மணி முதல் தடை உத்தரவு அமல்படுத்தப்படும்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டங்களை ஒடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் நாளை இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதன் எதிரொலியாக கர்நாடகா முழுவதும் திடீரென 144 தடை உத்தரவு தற்போது முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் பெங்களூரு நகரில் மட்டும் நாளை காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும்.
இத்தடை உத்தரவானது டிசம்பர் 21-ந் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications