கடந்த வாரம் போராட்டம்! இப்போது மருத்துவமனையில் அனுமதி! கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு என்னாச்சு
டெல்லி: கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விடுதலை போராட்டங்கள் காலத்தில் நேருவால் தொடங்கப்பட்டது அசோசியேட்டடு ஜர்னல்ஸ், இது நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தது
நஷ்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த 2010இல் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன.

விசாரணை
யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வசம் இருந்ததால் சர்ச்சையானது. இதில் அமலாக்கத் துறையும் அன்னிய செலாவணி வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. சோனியா காந்தி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி மட்டும் கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜரானார்.

போராட்டம்
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். மேலும், ராகுல் காந்தியிடம் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இது காங்கிரஸ் கட்சியினருக்கு எழுச்சி அளிப்பதாக அமைந்துவிட்டது.

போலீஸ்
அந்த போராட்டத்தின் சமயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களைக் கூட போலீசார் மூர்க்கத்தனமாகக் கையாண்டதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து காங்கிரஸ் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தான் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் கை உடைந்ததாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

ஜோதிமணி
அதேபோல போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் எம்பி ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லும் வீடியோவும் பரபரப்பைக் கிளப்பியது. போலீசார் அவர் மீது தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கரூர் எம்பி ஜோதிமணி டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications