நகரும் பீரங்கிகள்.. பின்வாங்கும் சீன-இந்திய படைகள்.. லடாக் எல்லை இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா?
டெல்லி: இந்தியாவும், சீனாவும் கிழக்கு லடாக்கின் பாங்காங் த்சோ பகுதியில் இருந்து தங்கள் படைகளை வாபஸ் பெற ஆரம்பித்துள்ளன. பீரங்கிகள் உள்ளிட்ட போர் தளவாடங்கள் பின் நோக்கி நகர்த்தப்படுகின்றன.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லையில் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான், கிழக்கு லடாக் பகுதியில் சீனா திடீரென ராணுவத்தை குவித்தது. ஊடுருவ முயன்றது.
லடாக் எல்லையில் பாங்கோங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.

பேச்சு வார்த்தை
குறிப்பாக, பங்கோங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் பகுதிகளில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.

தீர்வு கிடைத்துள்ளது
இந்த நிலையில், இரு நாடுகளின் கமாண்டர்கள் மட்டத்திலான 9வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு கிடைத்துள்ளது. அதில், எடுக்கப்பட்ட முடிவின்படி, லடாக் எல்லையில் உள்ள பாங்கோங் ஏரி பகுதியில் இந்தியா-சீனா படைகளையும் விலக்கும் நடவடிக்கை இன்று தொடங்கியுள்ளது. எனவே, எல்லையில் படிப்படியாக அமைதி திரும்பக் கூடிய சூழல் உருவாகி உள்ளது.

சீனா உறுதி செய்துள்ளது
பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதியில் உள்ள, இரு நாட்டு படையினரும் விலகத் தொடங்கியுள்ளதாக சீன பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

நேரம் பிடிக்கும்
அதேநேரம், ஒரே நாளில் இது நடந்து விடாது. சற்று காலம் பிடிக்கும் நடைமுறையாகும். ஒவ்வொரு கட்டத்திலும் படைகள் வாபஸ் பெறப்படுவது கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகிறது.
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்!












Click it and Unblock the Notifications