லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை- உ.பி.அரசின் விசாரணை கமிஷன் மீது நம்பிக்கை இல்லை- உச்சநீதிமன்றம் டோஸ்
டெல்லி: லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக உ.பி. மாநில அரசின் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவத்தை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் டெல்லியை தொடர்ந்து ஹரியானா, உ.பி.யிலும் நடைபெற்றது. உ.பி.யின் லக்கிம்பூர் என்ற இடத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள், அம்மாநில துணை முதல்வர் மவுரியாவுக்கு கறுப்பு கொடி காட்ட முயன்றனர்.
அப்போது விவசாயிகள் கூட்டத்தின் மீது ஜீப் ஏற்றப்பட்டதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து வன்முறை வெடித்ததில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். நாட்டையே இந்த விவசாயிகள் படுகொலை சம்பவம் உலுக்கி எடுத்தது.

உச்சநீதிமன்றம் தலையீடு
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனடிப்படையில் உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூர்ய காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. தொடக்கத்தில் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவத்தில் யார் மீதும் உ.பி. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

மத்திய அமைச்சர் மகன் கைது
இதையடுத்து மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்டோரை உ.பி. அரசு கைது செய்தது. அத்துடன் பாஜகவினரை தாக்கியதாகவும் விவசாயிகளையும் உ.பி. அரசு கைது செய்தது. இதையடுத்து நடந்த வழக்கு விசாரணையின் போது, சாட்சிகளிடம் முழுமையாக வாக்குமூலங்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என உ.பி. அரசு தெரிவித்தது. இதற்கும் அப்போது உச்சநீதிமன்றம் கடும் கண்டனமும் அதிருப்தியும் தெரிவித்தது.
Recommended Video

உ.பி. கமிஷன் மீது நம்பிக்கை இல்லை
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆனையம் அமைக்கப்பட்டு லக்கிம்பூர் படுகொலைகள் குறித்து விசாரிக்கப்படுவதாக உ.பி. அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் ஏற்க மறுத்தது. இந்த விசாரணை கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. வேறு ஒரு மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டுதான் விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள்
அத்துடன் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளான ராகேஷ்குமார் ஜெயின், ரஞ்சித் சிங் ஆகியோரது பெயர்களையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 12-க்கு ஒத்திவைக்க வேண்டும் என உ.பி.அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கேட்டுக் கொண்டார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications