Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லக்கிம்பூர் வழக்கு: ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை- உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்றது உ.பி.அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லக்கிம்பூரில் விவசாயிகள் 4 பேர் கார் மீது படுகொலை செய்யப்பட்ட வழக்கை வெளி மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் யோசனை உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு ஏற்றுள்ளது.

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தப்படுகிறது. இதேபோல் உ.பி. மாநிலம் லக்கிம்பூரிலும் கடந்த மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியா உள்ளிட்டோர் லக்கிம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிர்ப்பு வகையில் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கறுப்பு கொடி போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை


அப்போது போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது சொகுசு கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து வன்முறை வெடித்தது. லக்கிம்பூர் வன்முறை சம்பவங்களில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

உ.பி.அரசு மீது அதிருப்தி

உ.பி.அரசு மீது அதிருப்தி

இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் தொடக்கம் முதலே உ.பி. அரசு மெத்தனமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றம் விமர்சித்தது. இதையடுத்தே மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்டோரை உ.பி. போலீசார் கைது செய்தனர். ஆனாலும் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பெறுவது உள்ளிட்டவை குறித்தும் உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

வெளி மாநில நீதிபதிகள்

வெளி மாநில நீதிபதிகள்

இதையடுத்து லக்கிம்பூர் படுகொலை வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகளான ரஞ்சித் சிங், ராகேஷ் ஜெயின் ஆகியோரில் ஒருவரை விசாரணை நீதிபதியாக நியமிக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. உ.பி.அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி இருந்தார்.

அதிகாரிகளை மாற்ற உத்தரவு

அதிகாரிகளை மாற்ற உத்தரவு

இன்றைய விசாரணையின் போது ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு லக்கிம்பூர் சம்பவங்களை விசாரிக்கலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் யோசனையை உ.பி. அரசு ஏற்பதாக ஹரீஷ் சால்வே கூறினார். மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளாக உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்; தற்போது இன்ஸ்பெக்டர் நிலையிலான அதிகாரிகள்தான் விசாரித்து வருகின்றனர் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதனையும் ஏற்றுக் கொண்டு வரும் புதன்கிழமைக்குள் உ.பி. அரசு நடவடிக்கை எடுக்கும் என ஹரீஷ் சால்வே உறுதியளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+