சீனாவுடன் டென்ஷன் ஒருபக்கம்.. திடீரென பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் போர் விமானங்களை குவித்த இந்தியா
டெல்லி: பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மேற்குப் பிராந்தியத்தில், இந்தியாவின் இலகு ரக போர் விமானமான தேஜஸ் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
ஏற்கனவே லடாக் பிரச்னையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கிழக்கு எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மேற்கு பகுதியில் தேஜஸ் விமானங்கள் அதிக அளவுக்கு குவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சதிகளை முறியடிக்க
எதிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அவர்களின் சதி முயற்சிகளை முறியடிக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு பிராந்திய எல்லை பகுதியில் தேஜஸ் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூலூர்
தமிழகத்தின் சூலூர் விமானப்படையைச் சேர்ந்த 45 தேஜஸ் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 15ம் தேதி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, தேஜஸ் போர் விமானங்களின் பணியை பாராட்டியிருந்தார்.

மோடி பாராட்டு
மேலும் இந்த விமானத்தின் அதிநவீனமான மார்க்1 ஏ ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் எனவும் கூறியிருந்தார். இந்த ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விமானப்படை இறுதி செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமானம்
தேஜஸ் ஜெட் என்பது ஒற்றை இயந்திரம், நான்காம் தலைமுறை, மல்டிரோல் லைட் ஃபைட்டர் விமானமாகும். இது இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படைக்கான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் விமான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்துடன் இணைந்து ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியால் வடிவமைக்கப்பட்டது ஆகும்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications