தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது.. அது அடிப்படை உரிமை இல்லை..டெல்லி நீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: தன்பாலின உறவு என்பது சட்ட விரோதமானது இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனால் தன்பாலின திருமணத்தை அடிப்படை உரிமையாக யாரும் கோர முடியாது என்று மத்திய அரசு டெல்லி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்து திருமண சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு இன்று பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

அதில் தன்பாலின உறவு என்பது சட்ட விரோதமானது என்று கூறும் சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டிருந்தாலும்கூட, இதை வைத்துக்கொண்டு தன்பாலின திருமணத்தை அடிப்படை உரிமையாக யாரும் கோர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்வதும், அவர்கள் உறவில் இருப்பதும் இந்தியக் குடும்ப கலாச்சாரத்தின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியக் குடும்ப முறையில் கணவர் என்பவர் ஆணாகவும் மனைவி என்பவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
திருமணம் என்பது இரண்டு தனிப்பட்ட நபர்களை சமூகம் அங்கீகரிக்கும் நிகழ்வாகும். தற்போதுள்ள சட்டத்தின்படி ஒரு பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதை அங்கிரிக்கும் எந்தவொரு சட்டமும் இதுவரை இங்கு உருவாக்கப்படவில்லை. எனவே, தன்பாலின திருணத்திற்கு நீதிமன்றத்தால் அங்கீகரிக்க முடியாது என்றும் அதில் தெரிவிக்கபட்டடுள்ளது.
மேலும், ஒருவருக்கு அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 21இன் கீழ் தன்பாலின திருமணத்தைக் கொண்டு வர முடியாது என்றும் மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications