லாக்டவுன் விதிகளை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை.. 2 வருட சிறைக்கு வாய்ப்பு
டெல்லி: லாக்டவுன் விதிகளை மீறுவோர் அல்லது தவறான தகவல்களை பரப்புவோர் மீது, 2005ம் ஆண்டின், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு வெளியிட்ட ஒரு அறிவிப்பில்,

பொது அதிகாரிகள் மற்றும் குடிமக்களின் கவனத்திற்கு, பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், லாக்டவுன் நடவடிக்கைகளை மீறுவோர் மீது, இந்த சட்டத்தின்கீழ், தொடர்புடைய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

லாக்டவுனை, அமல்படுத்துவதைத் தடுக்கும் யாராக இருந்தாலும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும், தவறான வதந்திகளை பரப்புவோருக்கு, 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். பேரழிவு போன்ற சூழ்நிலையில் பணம் அல்லது பொருளை முறைகேடாகப் பயன்படுத்தினால், 2 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications