லோக்சபா ஒருநாள் முன்கூட்டியே ஒத்திவைப்பு- ராகுல் காந்தியின் நீட் விவாதம் கோரிக்கை நிராகரிப்பு!
டெல்லி: 18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் ஒருநாள் முன்கூட்டியே மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபாவில் நாளை நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்து லோக்சபா ஒருநாள் முன்கூட்டியே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் ஜூன் 24-ந் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்களும் புதிய எம்பிக்கள் பதவியேற்றனர்.

இதனையடுத்து லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கு 48 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வானார். 17-வது லோக்சபா சபாநாயகராகவும் பதவி வகித்தவர் ஓம் பிர்லா.
பின்னர் ஜூன் 27-ந் தேதி ராஜ்யசபா கூடியது. அன்றைய தினம் லோக்சபா- ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி இன்று லோக்சபாவில் பதிலளித்தார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் அனல் பறந்தன. எதிர்க்கட்சித் ராகுல் காந்தி பேசும் போது பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் 50 முறை குறுக்கிட்டனர். லோக்சபாவில் இன்று பிரதமர் மோடியும் சரமாரியாக பதிலடி கொடுத்தார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர்.
இதனிடையே லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதம் நிறைவடைந்ததால் நாளை லோக்சபாவில் நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதமும் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் லோக்சபா ஒருநாள் முன்னதாகவே திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவாதம் நடத்த வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications