Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா ஒருநாள் முன்கூட்டியே ஒத்திவைப்பு- ராகுல் காந்தியின் நீட் விவாதம் கோரிக்கை நிராகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் ஒருநாள் முன்கூட்டியே மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபாவில் நாளை நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்து லோக்சபா ஒருநாள் முன்கூட்டியே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் ஜூன் 24-ந் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்களும் புதிய எம்பிக்கள் பதவியேற்றனர்.

lok sabha neet

இதனையடுத்து லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கு 48 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வானார். 17-வது லோக்சபா சபாநாயகராகவும் பதவி வகித்தவர் ஓம் பிர்லா.

பின்னர் ஜூன் 27-ந் தேதி ராஜ்யசபா கூடியது. அன்றைய தினம் லோக்சபா- ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி இன்று லோக்சபாவில் பதிலளித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் அனல் பறந்தன. எதிர்க்கட்சித் ராகுல் காந்தி பேசும் போது பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் 50 முறை குறுக்கிட்டனர். லோக்சபாவில் இன்று பிரதமர் மோடியும் சரமாரியாக பதிலடி கொடுத்தார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனிடையே லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதம் நிறைவடைந்ததால் நாளை லோக்சபாவில் நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதமும் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் லோக்சபா ஒருநாள் முன்னதாகவே திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவாதம் நடத்த வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+