7 கட்டமாக லோக்சபா தேர்தல்.. முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்.11... வாக்கு எண்ணிக்கை மே 23
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகளை இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது.
டெல்லி: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2019 லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. இதற்கான பிரச்சாரம் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 2வது கட்ட வாக்குப் பதிவின்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும். வாக்குப் பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும்.
ஏப்ரல் 18ம் தேதியே நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 2! சட்டசபைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபேறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
#WATCH live from Delhi: Election Commission of India addresses a press conference. https://t.co/E0yEp9LHYq
— ANI (@ANI) March 10, 2019
அந்தந்த மாநில லோக்சபா தேர்தலுடன் 4 மாநில சட்டமன்ற தேர்தல் நடக்கும்
அருணாசலப்பிரதேசம், சிக்கிம், ஆந்திரா பிரதேசம், ஒடிசாவில் சட்டசபை தேர்தல்
ஜம்மு காஷ்மீரில் தற்போது சட்டமன்ற தேர்தல் கிடையாது
பாதுகாப்பு கருதி லோக்சபா தேர்தல் மட்டுமே காஷ்மீரில் நடக்கும்
அனைத்து பூத்களிலும் விவிபாட் பயன்படுத்தப்படும் - சுனில் அரோரா
அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள்- சுனில் அரோரா
மாற்றுத்திறனாளிகளுக்காக தனி ஆப் உருவாக்கப்படும் - சுனில் அரோரா