3-ம் கட்ட தேர்தல்.. ஓட்டு பதிவு முடிந்து 4 நாட்களுக்கு பிறகு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்ட EC
டெல்லி: 3 ஆம் கட்ட லோக்சபா தேர்தலில், 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் தேதி குஜராத் உள்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 93 தொகுதிகளுக்கு நடந்த ஓட்டுப்பதிவில் 65.68 சதவீத பேர் வாக்கு அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் முடிவு கடந்த மாதம் 19 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 26 ஆம் தேதியும் நடந்து முடிந்தது. மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த 7 ஆம் தேதி நடந்து முடிந்தது.

இந்த நிலையில் முதல் 2 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்கு சதவிகிதம் முறையே, 66.14% மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு 66.71% என தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும் முதல் கட்ட வாக்குப்பதிவின் வாக்கு சதவிகிதம் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இதேபோல் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் வாக்கு சதவிகிதம் 4 நாட்களுக்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. வாக்காளர்களின் வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் இவ்வளவு தாமதம் செய்தது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் சரிவர பதில் அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன.
பொதுவாக லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடியும் நாளிலேயே வாக்கு சதவீதம் எவ்வளவு பதிவானது என்பது தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். பின்னர் அதற்கு அடுத்த நாள் இறுதிக்கட்டமாக வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
ஆனால் தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவிகிதம் குறித்த இறுதி விபரங்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி 3 ஆம் கட்டமாக நடந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
3 ஆம் கட்ட லோக்சபா தேர்தலில், 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 66.89 சதவீத ஆண்களும், 64.41 சதவீத பெண்களும், 3 ஆம் பாலினத்தவர் 25.2 சதவீதம் பேர் என மொத்தம் 65.68 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
கடந்த 7 ஆம் தேதி குஜராத் உள்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்கு சதவிகிதம் 66.58 என்று தேர்தல் நடந்து 4 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications