Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3-ம் கட்ட தேர்தல்.. ஓட்டு பதிவு முடிந்து 4 நாட்களுக்கு பிறகு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்ட EC

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 3 ஆம் கட்ட லோக்சபா தேர்தலில், 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் தேதி குஜராத் உள்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 93 தொகுதிகளுக்கு நடந்த ஓட்டுப்பதிவில் 65.68 சதவீத பேர் வாக்கு அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் முடிவு கடந்த மாதம் 19 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 26 ஆம் தேதியும் நடந்து முடிந்தது. மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த 7 ஆம் தேதி நடந்து முடிந்தது.

Lok Sabha election 2024 65 68 voter turnout in 3rd Phase of polling says EC

இந்த நிலையில் முதல் 2 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்கு சதவிகிதம் முறையே, 66.14% மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு 66.71% என தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும் முதல் கட்ட வாக்குப்பதிவின் வாக்கு சதவிகிதம் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இதேபோல் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் வாக்கு சதவிகிதம் 4 நாட்களுக்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. வாக்காளர்களின் வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் இவ்வளவு தாமதம் செய்தது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் சரிவர பதில் அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன.

பொதுவாக லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடியும் நாளிலேயே வாக்கு சதவீதம் எவ்வளவு பதிவானது என்பது தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். பின்னர் அதற்கு அடுத்த நாள் இறுதிக்கட்டமாக வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

ஆனால் தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவிகிதம் குறித்த இறுதி விபரங்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி 3 ஆம் கட்டமாக நடந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

3 ஆம் கட்ட லோக்சபா தேர்தலில், 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 66.89 சதவீத ஆண்களும், 64.41 சதவீத பெண்களும், 3 ஆம் பாலினத்தவர் 25.2 சதவீதம் பேர் என மொத்தம் 65.68 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 7 ஆம் தேதி குஜராத் உள்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்கு சதவிகிதம் 66.58 என்று தேர்தல் நடந்து 4 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+