இத்தனை சோதனையா? பாஜக சீட் தராத கோபம்- மாஜி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அரசியலுக்கே முழுக்கு!
டெல்லி: லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் தாம் மீண்டும் மருத்துவ சேவைக்கே திரும்புவதாகவும் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று அறிவித்தது. ஏற்கனவே சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்டவை வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன.

பாஜகவோ 195 லோக்சபா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முதல் கட்டமாக அறிவித்தது. இதனால் அத்தனை பார்வைகளும் பாஜக பக்கம் திரும்பியது. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடி (வாரணாசி), அமித்ஷா (காந்தி நகர்), ராஜ்நாத் சிங் (லக்னோ) தொகுதிகளில் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டது. உபி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் லோக்சபா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் அன்சோல் தொகுதியில் போஜ்புரி (போஜ்பூரி) நடிகர் பவன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் மேற்கு வங்க மாநிலப் பெண்கள் குறித்த படங்கள், கருத்துகளால் பவன் சிங், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார். இதனால் லோக்சபா தேர்தலிலேயே தாம் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார் பவன் சிங்.
இதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், தமக்கு டெல்லியில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் தாம் தமது மருத்துவ துறைக்கே திரும்புவதாகவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள டாக்டர் ஹர்ஷ்வர்தன், இதுவரையில் தாம் பணியாற்ற வாய்ப்பு தந்த பிரதமர் மோடி மற்றும் பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகால தேர்தல் அரசியலில் போட்டியிட்ட 5 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் வெற்றி பெற்றேன். 2 லோக்சபா தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். தேர்தல்களில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளேன். அரசாங்கத்திலும் கட்சியிலும் கவுரவமான பதவிகள் கொடுக்கப்பட்டன. நான் என்னுடைய மருத்துவ சேவைகள் துறைக்கே திரும்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதென்னடா சோதனை மேல் சோதனை!
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications