நல்லா கேட்டுக்கங்க.. 23ம் தேதி காலை எண்ண ஆரம்பிப்பாங்க.. நைட்டுக்கு மேல்தான் ரிசல்ட் தெரியும்!
தேர்தல் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும் என கூறப்படுகிறது
Recommended Video
டெல்லி: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும் என்றும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
கடந்த ஏப்ரல் 18-ந் தேதி, 38 எம்பி தொகுதிகள், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தன. போன 19-ந் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடந்து முடிந்தது.
ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மிஷின்கள், அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த ஒப்புகைச் சீட்டு மிஷின்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அறிவிப்பு
நாளை மறுதினம் அதாவது வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனுக்குடனே வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.

வாக்குப்பதிவு
விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணி சரிபார்க்கப்படுவதால், முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் விவிபிஏடி எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.

ஒப்புகை சீட்டு
இதுபற்றி தேர்தல் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "சட்டமன்ற இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவானவற்றை மாலை 4 மணிக்குள் எண்ணி முடித்துவிடுவார்கள். ஆனால் விவிபிஏடி எந்திரத்தில் ஒரு ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை எண்ண குறைந்தது 40 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகலாம் என்பதால், அவை எண்ணி முடிக்க மாலை 5 மணி ஆகிவிடும். அதனால் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு பிறகே தெரிய வரும்.

விவிபிஏடி
எம்பி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவும் இப்படித்தான் காலதாமதம் ஆகுமாம். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தொகுதிக்கு ஒரு விவிபிஏடி ஒப்புகை சீட்டு எந்திரம் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. அதை எண்ணி முடிக்கவே நள்ளிரவு ஆகிவிட்டது. அதுபோன்ற நிலைதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும். எனவே நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும்" என்றார்.

தபால் ஓட்டுகள்
தபால் ஓட்டுகளை துல்லியமாக சரிபார்த்து எண்ணி முடிக்க நேரம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, வாக்கு எண்ணிக்கையை ஒப்புகை சீட்டுடன் சரிபார்த்து, சரிபார்த்து எண்ண வேண்டி உள்ளதால், இறுதி சுற்றுகள் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. அதனால் தேர்தலின் உத்தேச முடிவையே மதியத்துக்கு பிறகுதான் அறிய முடியும். எனவே இறுதி முடிவை தெரிந்து கொள்ள இரவு ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications