பாஜக கூட்டணிக்கே வெற்றி.. மெஜாரிட்டி பெற்று ஆட்சியை பிடிக்கும்.. சி வோட்டர் அதிரடி கணிப்பு!
Recommended Video
டெல்லி: டைம்ஸ் ஆப் இந்தியா - சி வோட்டர் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. அதன்பின் வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தற்போது இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது.லோக்சபா தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப் பதிவும் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
தேர்தல் முடிந்துள்ளதால் இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா - சி வோட்டர் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.
மே.வங்கத்தில் இப்படி கள்ள ஓட்டு போடுறாங்க.. கண்டுக்க மாட்றீங்களே.. சீதாராம் யெச்சூரி புகார்!
அதன்படி மொத்தமாக பாஜக அணி- 287 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 128 இடங்களை வெல்லும். பகுஜன் சமாஜ்வாதி கூட்டணி 40 இடங்களை வெல்லும். இதர மாநில கட்சிகள் 87 இடங்களை வெல்லும்.