850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக்
டெல்லி: தற்போது மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 543. இந்த எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த இருப்பதாக மத்திய அரசு முன்மொழிவை கொடுத்திருக்கிறது.
இந்த முன்மொழிவின்படி, இந்த முன்மொழிவின்படி, மொத்த இடங்களின் எண்ணிக்கை 850-ஆக உயர்த்தப்படும். இவற்றில், 815 இடங்கள் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்காக ஒதுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன?
தற்போதுள்ள மக்களைவையின் 543 இடங்கள் என்பது, கடந்த 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அப்போது நாட்டின் மக்கள் தொகை சுமார் 55 கோடியாக இருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை சுமார் 140 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதி எண்ணிக்கையும் அதிகரிப்பதே தொகுதி மறுசீரமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
இந்தியா கூட்டணி எதிர்ப்பு
இந்த சீரமைப்பு மக்கள் தொகையின் அடிப்படையில்தான் செய்யப்படும். அதாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக எம்பி தொகுதிகளும், குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு குறைந்த தொகுதிகளும் உருவாக்கப்படும். அப்படியெனில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. காரணம் தமிழ்நாடு கடந்த காலங்களில் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியிருக்கிறது. அதற்கு பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, பழிவாங்கிவிடக்கூடாது என்று திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
முக்கிய மசோதா
மத்திய அரசு இந்த முன்மொழிவுடன் நிற்காமல், தொகுதி மறுவரையறை குறித்த கட்டாய விதியை நீக்கும் வகையில், அரசியலமைப்பின் 82-வது சரத்து திருத்த இருக்கிறது. அடுத்த தொகுதி மறுவரையறைப் பணி, 2026-க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் அமையும் என்று 82-வது சரத்தின் மூன்றாவது நிபந்தனை கூறுகிறது. ஆனால், முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதா அந்த முழுமையான நிபந்தனையையும் நீக்குகிறது.
தென் மாநிலங்களின் நிலைமை
இதன் மூலம் 2031 மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை காத்திருக்கலாமல், 2026லேயே தொகுதி மறு சீரமைப்பு செய்யப்படும். இப்படி செய்வதால் தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மொத்த தென் மாநிலங்களும் அடி வாங்கும். இந்த மாநிலங்கள் எல்லாம் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்!












Click it and Unblock the Notifications