மோடி கண்ணை பாருங்க.. இதுதான், இந்த விஷயம்தான் அவரை ஸ்பெஷலாக்குது- கங்கனா ரணாவத்
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவில் உள்ள வீரபத்ரசாமி கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் போட்டோவை பகிர்ந்துள்ள நடிகை கங்கனா ரணாவத் அதுபற்றி கூறிய கருத்து கவனம் பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதற்காக 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ள பிரதமர் மோடி தற்போது பல கோவில்களுக்கு சென்று வருகிறார். கடந்த 11ம் தேதி அவர் விரதத்தை தொடங்கி கடைப்பிடித்து வருகிறார்.
இதற்கிடையே தான் நேற்று ஆந்திர மாநிலம் லெபாக்ஷி என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு கோவிலில் அமர்ந்து தெலுங்கில் எழுதப்பட்ட ரங்கநாத ராமாயணத்தின் சில பாடல்களை பக்தர்கள் பாட கேட்டார். இந்த கோவில் ராமாயணத்துடன் தொடர்பு உடையது என்பதால் தான் பிரதமர் மோடி வந்து தரிசனம் செய்தார்.
அதாவது ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்தி சென்றபோது ஜடாயு பறவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது அது படுகாயமடைந்த நிலையில் அந்த வழியாக ராமர் வந்தபோது சீதையை ராவணன் கடத்தி சென்றதாக கூறிய பிறகு ஜடாயு உயிரிழந்தது. அதன்பிறகு ராமர் அருளால் ஜடாயு மோட்சம் பெற்றதாக கூறப்படும் நிலையில் மோட்சம் பெற்ற இடம் தான் லெபாக்ஷி என கூறப்படுகிறது. இப்படி ராமாயணத்துடன் இந்த கோவில் தொடர்பு கொண்டுள்ளது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி வீரபத்ரசாமி கோவிலில் தரிசனம் செய்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இந்த போட்டோவை நடிகை கங்கனா ரணாவத் பார்த்தார். இதையடுத்து அவர் பிரதமர் மோடியின் போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அதில் பிரதமர் மோடியின் கண்கள் குறித்து தெரிவித்த கருத்து கவனம் பெற்றது.
இதுதொடர்பாக கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பிரதமர் மோடி நம்மில் ஒருவர் என்பதை நாம் அனைவரும் அறிந்து இருக்கிறோம். ஆனால் நம்மில் இருந்து அவரை வேறுபடுத்தி வித்தியாசமாக காட்டுவது எது? இதில் எனது கருத்து என்னவென்றால் அவரது நோக்கம் மற்றும் செயலின் தீவிரத்தன்மை தான். இந்த படத்தில் அவரது கண்களை பாருங்கள். அது பளபளக்கும் வாளைவிட கூர்மையாகவும், பிரகாசமாகவும் இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications