மோடி வெறுப்பை உமிழ்கிறார்.. நான் அன்பை அளிக்கிறேன்.. கடைசியில் அன்புதான் வெல்லும்.. ராகுல் பளீர்!
லோக்சபா தேர்தலில் மோடியின் வெறுப்பை விட தன்னுடைய அன்பே வெல்லும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: லோக்சபா தேர்தலில் மோடியின் வெறுப்பை விட தன்னுடைய அன்பே வெல்லும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. மொத்தம் 59 தொகுதிகளில் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

5 கட்டங்களாக இதுவரை 425 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 118 தொகுதிகளில் தேர்தல் நடக்க வேண்டும். இன்று 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வீட்டில் இருந்து நடந்தே வந்தார். மத்திய டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து டெல்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள அவுரங்கசிப் லேனில் வாக்களிக்க நடந்தே வந்தார்.
இவருடன் குறைவான அளவு பாதுகாவலர்கள் வந்தனர். இந்த வாக்களித்த ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், காங்கிரஸ் பாஜக இடையே நல்ல போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் பல முக்கிய விஷயங்களை மையமாக வைத்து இயங்குகிறது. டிமானிடைசேஷன், விவசாயிகள் பிரச்சனை, கப்பார் சிங் வரி (ஜிஎஸ்டி), ரபேல் ஊழல் உள்ளிட்ட விஷயங்களை மையமாக வைத்து தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் மோடி வெறுப்பை வைத்து பிரச்சாரம் செய்தார்.எல்லோர் மீதும் வெறுப்பை உமிழ்ந்தார். ஆனால் நான் அன்பை குறித்து பேசினேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, கடைசியில் அன்புதான் வெல்லும்.
மக்கள்தான் நம்முடைய தலைவர்கள். மக்கள் கொடுக்கும் முடிவை கடைசியில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று ராகுல் காந்தி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications