சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும்
டெல்லி: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சப்ளை பாதிப்புகளைச் சீர் செய்ய மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே குழாய் வழி கனெக்ஷன் வைத்திருப்போருக்கு புதிய எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படாது. அவர்களுக்கு மாற்று சிலிண்டர்களும் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து ஈரானைத் தாக்குகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் இப்போது சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய சிலிண்டர் இல்லை
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ள சூழலில், குழாய் இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு கொண்ட குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல பிஎன்ஜி வைத்திருக்கும் குடும்பங்கள் தங்கள் எல்பிஜி இணைப்பைத் துறக்க வேண்டும் என்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இதுபோல பிஎன்ஜி கனெக்ஷன் வைத்திருப்போருக்கு சிலிண்டர்களை நிரப்பக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரவ பெட்ரோலிய எரிவாயு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.. அதன்படி பிஎன்ஜி பயனர்கள் புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவது தடை செய்யப்படுகிறது. அதில் மேலும், "குழாய் வழி சப்ளை உடன் எல்பிஜி இணைப்பையும் வைத்திருக்கும் எந்தவொரு நபரும், சிலிண்டர்களைப் பெறக் கூடாது. குழாய் வழி கேஸ் சப்ளை உள்ள நபர்கள் தங்கள் உள்நாட்டு எல்பிஜி இணைப்பை உடனடியாகத் துறக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கனெக்ஷனும் தர மாட்டோம்
அதேபோல இப்படி குழாய் வழி கேஸ் கனெக்ஷன் உள்ள யூசர்கள் புதிய கனெக்ஷன் கோரி விண்ணப்பிக்கவும் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி விண்ணப்பித்தாலும் அவர்களின் புதிய எல்பிஜி கேஸ் கனெக்ஷன் விண்ணப்பம் பிராசஸ் செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில், அதைச் சமாளிக்க இது உதவும்.
மேலும், குழாய் வழி கனெக்ஷன் வைத்திருப்போர் ஏற்கனவே எல்பிஜி சிலிண்டர்களை வைத்திருந்தாலும் அதை உடனடியாக திரும்பத் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் குழாய் வழி கனெக்ஷன் வைத்திருப்போருக்கு எல்பிஜி கேஸ் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
நடவடிக்கை
கேஸ் மற்றும் எரிபொருள் சப்ளையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்திருந்தது. இந்த தகவலை ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி உறுதியளித்தார். இதன் காரணமாக வரும் நாட்களில் மத்திய கிழக்கு வழியாக இந்தியா வரும் டேங்கர் கப்பல்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இது நிலைமையைச் சமாளிக்க மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும்.
பெரிய சிக்கல்
கடந்த வாரம் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது இந்தியாவுக்கு ஒரு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவைகளில் 60% இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 85-90% சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து பெறப்படுகிறது. இந்த நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அனுப்புவதற்கான பாதையாகப் பயன்படுத்துகின்றன. அதை ஈரான் முடக்கியதே இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்குக் காரணம்.
இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி என்பது தற்காலிக தீர்வு தானே தவிர நிரந்தர தீர்வு இல்லை. போர் எப்போது முடிந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி திரும்புகிறதோ.. அப்போது தான் நிலைமை முழுமையாகச் சரியாகும்!
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை?












Click it and Unblock the Notifications