17C- வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவை வெளியிட கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: வாக்குச் சாவடிகள் வாரியாக வாக்குப் பதிவை உள்ளடக்கிய 17 சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கோரிய பொதுநலன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் இதில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் அடுத்த 48 மணிநேரத்துக்குள் வாக்குச் சாவடிகள் வாரியாக வாக்குப் பதிவு விவரத்தை வெளியிட வேண்டும்; வாக்குச் சாவடிகளில் பூத் ஏஜெண்டுகளிடம் தரப்படும் 17 சி படிவத்தை உள்ளடக்கியதாக இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநலன் வழக்கு. உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பு இந்த வழக்கைத் தொடர்ந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
உச்சநீதிமன்ற்த்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், வாக்குப் பதிவுகள் தொடர்பான 17 சி படிவத்தைப் பற்றிய புரிதல் இல்லாத நிலையில் பொதுமக்களிடையே வாக்குப் பதிவு தொடர்பான குழப்பம் ஏற்படும். முதல் முறையாக வாக்குப் பதிவு எண்ணிக்கை வெளியிடப்படும்; அடுத்ததாக 17 சி படிவத்துடன் வெளியிடும் போது தபால் வாக்கு எண்ணிக்கையும் சேரும். இந்த வித்தியாசத்தை எளிதில் புரிந்து கொள்ளாத போது குழப்பம்தான் ஏற்படும்.
தேர்தல் ஆணையத்தின் மீது வஞ்சகம் கொண்டவர்கள் அவதூறை பரப்ப இது வழிவகுக்கும். 17சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டால் சிக்கல்கள் எழும். அதே 17 சி படிவத்தை போலியாகவும் உருவாக்கி குழப்பத்தை உருவாக்கலாம். இது தேர்தல் ஆணையம் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, தற்போது லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்குப் பதிவு விவரங்களில் தலையிட விரும்பவில்லை. ஆகையால் மனுதாரரின் மனுவை தற்போது விசாரிக்க இயலாது என கூறி ஒத்திவைக்கப்பட்டது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications