ம.பி: பாஜகவுக்கு மரண பயம் காட்டும் கருத்து கணிப்புகள்- ரூ.50,700 கோடி திட்டங்களுக்கு மோடி அடிக்கல்!
டெல்லி: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக படுதோல்வியை சந்திக்கலாம் என கருத்து கணிப்புகள் ஆரூடம் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ரூ50,700 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று ம.பி. யில் அடிக்கல் நாட்டினார்.
மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் அபார வெற்றி பெற்று முதல்வர் கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால் கமல்நாத் அரசாங்கத்தைக் கவிழ்த்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது.

மத்திய பிரதேச மாநிலத்துக்கு நவம்பர் இறுதி அல்லது டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு எதிராகவே இருக்கின்றன. இந்நிலையில்தான் ரூ50,700 கோடி திட்டங்களுடன் இன்று பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநில பயணம் மேற்கொள்கிறார்.
இன்று காலை 11.15 மணியளவில் மத்தியப் பிரதேசத்தின் பினா சென்றடைந்தார் பிரதமர் மோடி, அங்கு 'பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகம்' மற்றும் மாநிலம் முழுவதும் பத்து புதிய தொழில்துறை திட்டங்கள் உட்பட ரூ .50,700 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.49,000 கோடி செலவில் உருவாக்கப்படும் இந்த அதிநவீன சுத்திகரிப்பு ஆலை, ஜவுளி, பேக்கேஜிங், மருந்து போன்ற பல்வேறு துறைகளுக்கு முக்கிய அங்கமான எத்திலீன் மற்றும் புரோபிலீன் ஆகியவற்றை ஆண்டுக்கு சுமார் 1200 கே.டி.பி.ஏ (கிலோ-டன்) உற்பத்தி செய்யும்.
#WATCH | Madhya Pradesh: Prime Minister Narendra Modi lays the foundation stone of projects worth more than Rs. 50,700 crore including the 'Petrochemical Complex' at Bina Refinery and ten new industrial projects across the state. PM also laid the foundation stone of ten projects… pic.twitter.com/uxpYIIRnkr
— ANI (@ANI) September 14, 2023
இந்நிகழ்ச்சியின் போது, நர்மதாபுரம் மாவட்டத்தில் 'மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்' என்ற 10 திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தூரில் இரண்டு தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்; ரத்லாமில் ஒரு பெரிய தொழில் பூங்கா; மத்தியப் பிரதேசத்தில் ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
நர்மதாபுரம்: 'மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம், நர்மதாபுரம்' ரூ.460 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்படும், இது பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு படியாகும்.
இந்தூர்: இந்தூரில் சுமார் 550 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் 'ஐ தகவல் தொழில்நுட்ப பூங்கா 3 மற்றும் 4' தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
ரத்லாம்: ரூ.460 கோடிக்கும் அதிகமான செலவில் ரத்லாமில் பெரிய தொழில் பூங்கா கட்டப்படும், இது ஜவுளி, வாகன உற்பத்தி, மருந்துகள் போன்ற முக்கியத் துறைகளின் முக்கிய மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பூங்கா டெல்லி, மும்பை அதிவேக நெடுஞ்சாலையுடன் நன்கு இணைக்கப்படும் மற்றும் முழு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும், இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
தொழில்துறை பகுதிகள்: ஷாஜாபூர், குணா, மௌகஞ்ச், அகர் மால்வா, நர்மதாபுரம் மற்றும் மக்சி ஆகிய ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் சுமார் ரூ .310 கோடி செலவில் உருவாக்கப்படும்.












Click it and Unblock the Notifications