மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. கருத்து கணிப்புகள் என்னவாகும்? நாளை வாக்கு எண்ணிக்கை- ஏற்பாடுகள் தீவிரம்!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இரு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 15 மாவட்டங்களில் 43 தொகுதிகளில் நவம்பர் 13-ல் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவில் மொத்தம் 64.85% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து 12 மாவட்டங்களின் 38 தொகுதிகளில் நவம்பர் 20-ல் 2-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 67.59% வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 29,563 வாக்குச் சாவடிகளில் பதிவான அனைத்து வாக்குகளும் மொத்தம் 23 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட உள்ளன.
இதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 66.05% வாக்குகள் பதிவாகி இருந்தன. மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை எண்ணப்பட உள்ளன.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகும். இதனையடுத்து 30 நிமிடங்களுக்கு ஒரு முறை முடிவுகள் தொடர்ந்து வெளியாகும்.
இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியை தக்க வைக்கும் எனவும் சில எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. இரு மாநிலங்களிலும் தொங்கு சட்டசபைக்கும் சாத்தியம் இருப்பதாகவும் ஓரிரு எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications