காமராஜர், நிஜலிங்கப்பா வரிசையில் மல்லிகார்ஜூன கார்கே... காங்கிரஸ் தலைவராகும் 10-வது தென்னிந்தியர்!
டெல்லி: காமராஜர், நிஜலிங்கப்பா வரிசையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகும் 10-வது தென்னிந்தியர் மல்லிகார்ஜூன கார்கே.
காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட்னா.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10-வது தென்னிந்தியர் என்ற பெருமையை பெறுகிறார் மல்லிகார்ஜூன கார்கே.

முதல் தலைவர்
1890-ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவராக சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பனப்பாக்கம் ஆனந்தசார்லு முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பின்னர் 1897-ம் ஆண்டு சி.சங்கரன் நாயர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். காங்கிரஸ் கமிட்டிக்கு அகில இந்திய தலைவரான ஒரே கேரளா மாநிலத்தவர் சங்கரன் நாயர் மட்டும்.

சீனிவாச அய்யங்கார்
1920-ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சி.விஜயராகவாச்சாரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆங்கிலேயரான ஹியூமுடன் மிக நெருக்கமாக இருந்தவர். பின்னர் எஸ். சீனிவாச அய்யங்கார் 1926-ல் காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். நாடு விடுதலை முன்னர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கடைசி தென்னிந்தியர் சீனிவாச அய்யங்கார்.

காமராஜர்
நாடு விடுதலைக்குப் பின்னர் 1948-ல் பட்டாபி சீதாராமையா (ஆந்திரா), நீலம் சஞ்சீவரெட்டி (ஆந்திரா) ஆகியோர் காங்கிரஸ் கமிடித் தலைவராகினர். 1964-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுபெரும் தலைவர் காமராஜர். அப்போது கிங் மேக்கர் என புகழப்பட்டார் காமராஜர். 1966-ம் ஆண்டு இந்திரா காந்தியை பிரதமராக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் காமராஜர். இத்தனைக்கும் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமானதாக இருந்தும் அதனை காமராஜர் ஏற்கவில்லை.

மல்லிகார்ஜூன கார்கே
1968-ம் ஆண்டு கர்நாடகாவின் நிஜலிங்கப்பா காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். அவருக்குப் பின்னர் பிவி நரசிம்மராவ, தென்னிந்தியாவில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். தற்போது காங்கிரஸ் கமிடித் தலைவராகி உள்ள மல்லிகார்ஜூன கார்கே அப்பதவியை ஏற்கும் 10-வது தென்னிந்தியர் ஆவார்.












Click it and Unblock the Notifications