இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் ராகுல் இல்லை! புத்தக ரிலீஸ் விழாவில் கார்கேவின் கடமையுணர்ச்சி!
டெல்லி: ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தகவல் அறிந்தும், கடந்த 23ஆம் தேதி அன்று தனது கடமை தவறாமல் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்திருக்கிறார் மல்லிகார்ஜுனே கார்கே.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்நாள் சாதனைகளை தொகுத்து Son of Soil என்ற தலைப்பில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தக வெளியீட்டு விழா கலந்துகொள்வதாக உறுதிகொடுத்து 23ஆம் தேதி தேதி கொடுத்திருந்திருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிக்கார்ஜுனே கார்கே.
அதன் பேரில் புத்தக வெளியீட்டு விழாவுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசீனா சையத் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் இந்த விழா மாலை நடைபெறுகிறது என்றால் அன்றைய தினம் நண்பகலே ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
இதனால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பதற்றம் பற்றிக்கொண்டது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியினர் திரள ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து புத்தக வெளியீட்டு விழாவை கார்கே ரத்து செய்து விடுவார் என விழா ஒருங்கிணைப்பாளர் ஹசீனா சையத் உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்பார்த்த நிலையில், திட்டமிட்ட நிகழ்ச்சியில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் எனக் கூறி கடமை தவறாமல் சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்திருக்கிறார் கார்கே.
அரசியல்வாதிகளுக்கு உணர்ச்சிகளை விட கடமை முக்கியம் என்பதை நிரூபித்திருக்கிறார் போல் கார்கே என, அவரை சொந்தக் கட்சியினரே கமெண்ட் அடிக்கவும் தவறவில்லை.
அதுமட்டுமல்ல அந்த விழாவில் லால் பகதூர் சாஸ்திரி குறித்து பேசியதை காட்டிலும் ராகுல் குறித்து அதிகம் பேசியிருக்கிறார். பகத் சிங் போன்ற வீரம் குணம் கொண்டவர் ராகுல் எனவும் பாஜகவின் மிரட்டல்களுக்கு அஞ்சக்கூடியவர் ராகுல் கிடையாது எனவும் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications