சீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெரியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது!
மனைவியை வெட்டி கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
டெல்லி: ஓவர் சந்தேகம்.. எப்ப பார்த்தாலும் சண்டை.. என்ன செய்யறதுன்னே தெரியல.. அதனால மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்றுவிட்டார் கணவர்!
டெல்லியின் கிராரி பகுதியை சேர்ந்தவர் அஷு. 33 வயதாகிறது. கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கிறார். சீமா என்ற மனைவி இருக்கிறார். சீமாவுக்கு 30 வயதாகிறது. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் சீமா மீது அஷுவுக்கு எப்ப பார்த்தாலும் சந்தேகம்.. அதனால் இருவருக்கும் இடையே நிறைய சண்டை வந்துள்ளது.

கொலை
ஆத்திரம் தீர எவ்வளவுதான் சண்டை போட்டாலும், சீமா மீது சந்தேகம் அடங்கவே இல்லை. இப்படி சண்டை போட்டுட்டு இருக்கிறதுக்கு, கொலையே செய்துவிடலாம் என்று அஷு முடிவெடுத்தார். அதற்காக, தங்களது இன்னொரு வீட்டில் இருந்து பொருட்களை எடுத்து கொண்டு வரலாம் வா.. என்று சீமாவை அழைத்து சென்றார் அஷு.

செப்டிக் டேங்க்
அங்கு போனதுமே திரும்பவும் சண்டை ஆரம்பமானது. இதில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அஷு மனைவியை அரிவாளால் அவரது உடம்பை துண்டு, துண்டாக வெட்டினார். பின்னர், சீமான் கை, கால்கள், தலையை வீட்டின் செப்டிக் டேங்க்கில் போட்டுவிட்டார்.

கால்வாய்
வெறும் உடலை மட்டும் ஒரு கேரிபேக்கில் வைத்து 2 கிலோமீட்டர் பைக்கில் வைத்து எடுத்து சென்று அங்கிருந்த ஒரு கால்வாய் ஒன்றில் வீசி எறிந்தார். பிறகு தன்னுடைய மகள்களுக்கு போனை போட்டு, நான் உங்க அம்மாவை கொன்னுட்டேன் என்று தகவல் சொல்லிவிட்டு, பக்கத்தில் இருந்த ஸ்டேஷனில் சரண் அடைந்துவிட்டார் அஷு.

உடல் பாகங்கள்
இதையடுத்து, அஷுவைக் கைது செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மணி நேரத்துக்கு பிறகு சீமான் உடல் பாகங்களை தீவிரமாக தேடி எடுத்தனர். இந்த சம்பவம் டெல்லியையே அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications