Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது மயானத்தில் எரியூட்டப்பட்ட மன்மோகன் சிங் உடல்.. அவமரியாதை நெஞ்சை உலுக்கியது.. ஜோதிமணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டாக்டர் மன்மோகன் சிங் எவ்வளவு உயர் பதவிகளை வகித்த போதும் சாதாரண மனிதராகவே வாழ்ந்தார். சாதாரண மனிதராகவே மறைந்தார். இன்று சாதாரண மனிதராக பொது மயானத்தில் ( Nigambodh Ghat) எரியூட்டப்பட்டார். பொது மயானத்தில் அவர் உடல் எரியூட்டப்பட்டபோது அருகில் இருந்து பார்த்தேன். அவர் மறைந்த துயரத்தோடு, அவருக்கு நிகழ்ந்த இந்த அவமரியாதை நெஞ்சை உலுக்கியது என கரூர் தொகுதி எம்பியும், காங்கிரஸ் நிர்வாகியுமான ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் சீக்கிய பிரதமரான மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கிற்கு தனி இடம் ஒதுக்காமல் பாஜக அரசு அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டிவருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டிருந்த பதிவில், "இந்திய அன்னையின் மகத்தான புதல்வரும், சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை டெல்லி நிகம்போத் காட்டில் நிகழ்த்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியதன் மூலம் மத்திய அரசு அவரை முற்றிலும் அவமதித்திருக்கிறது.

Manmohan Singh was cremated as an ordinary man at the Nigambodh Ghat Congress MP Jyotimani

அவர் இந்தியாவிற்கு 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்தவர். அவரது பதவிக் காலத்தில் நாடு பொருளாதார வல்லரசாக மாறியிருக்கிறது. அவரது கொள்கைகள் இன்னும் நாட்டின் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக இருக்கிறது.

இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்துக்கு மதிப்பளித்து, அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட நினைவிடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு நபரும் எந்தவித சிரமமும் இன்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

டாக்டர். மன்மோகன் சிங் நமது உயரிய மரியாதைக்கும் தனி நினைவிடத்துக்கும் தகுதியானவர் ஆவார். தேசத்தின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது புகழ்பெற்ற சமூகத்துக்கும் அரசு மரியாதை காட்டியிருக்க வேண்டும்" இவ்வாறு ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியினர் பலர் மன்மோகன் சிங்கிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு இறுதி சடங்கிற்கு தனி இடம் ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறார்கள்.

கரூர் தொகுதி எம்பியும், காங்கிரஸ் நிர்வாகியுமான ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், "டாக்டர் மன்மோகன் சிங் எவ்வளவு உயர் பதவிகளை வகித்த போதும் சாதாரண மனிதராகவே வாழ்ந்தார். சாதாரண மனிதராகவே மறைந்தார். இன்று சாதாரண மனிதராக பொது மயானத்தில் ( Nigambodh Ghat) எரியூட்டப்பட்டார்.

முன்னாள் பிரதமர் மரணமடைந்தால் தனி இடத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, பிறகு அந்த இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும். வழக்கமாக பிரதமர்களுக்கு வழங்கப்படும் இந்த மரியாதையை மகத்தான அந்த மனிதருக்கு வழங்க மோடி அரசு மறுத்துவிட்டது. பொது மயானத்தில் அவர் உடல் எரியூட்டப்பட்டபோது அருகில் இருந்து பார்த்தேன். அவர் மறைந்த துயரத்தோடு, அவருக்கு நிகழ்ந்த இந்த அவமரியாதை நெஞ்சை உலுக்கியது.

மன்மோகன் சிங் இந்த தேசத்தின் பொருளாதாரத்தை பேரழிவிலிருந்து மீட்டவர். உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமதிப்பை உருவாக்கியவர். அவர் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்தது.27 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டவர். புரட்சிகரமான,மக்களை அதிகாரப்படுத்துகிற சட்டங்களை உருவாக்கியவர். தன் வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர்.

பத்தாண்டுகாலம் இந்தியாவின் பிரதமர். அப்படிப்பட்ட ஒருவருக்கு இறுதிச் சடங்கு செய்ய ஒரு இடமில்லையா? பொது மயானத்தில் தான் அவர் உடல் எரியூட்டப்பட வேண்டுமா? எதிர்கட்சியை சேர்ந்த பிரதமர் என்றால் மோடி எரியூட்ட இடம் கூட தரமாட்டாரா? ஒரு மகத்தான மனிதரின் மரணத்தில் கூட இப்படி மோசமான அரசியல் செய்ய எப்படி மனம் வந்தது? இந்த தரம்தாழ்ந்த அரசியலால் மன்மோகன் சிங் அவர்களின் புகழ் மறைந்து விடாது. இந்த தேசம் இருக்கும் வரை அவர் புகழ் நீடித்து நிலைத்திருக்கும்" என்று ஜோதிமணி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியினரின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மன்மோகன் சிங் உயிரோடு இருந்தபோது அவருக்கு உண்மையான மரியாதையை காங்கிரஸ் ஒருபோதும் வழங்காத நிலையில், இபோது அவரது மரியாதையின் பெயரில் மலிவான அரசியல் செய்கிறார்கள். காங்கிரஸின் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனையை எவ்வளவு கண்டித்தாலும் போதாது. மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+