தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்... அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர் வாழ்த்து
டெல்லி: இன்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு உள் துறை அமைச்சர் அமித்ஷா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இன்று தமிழ்ப் புத்தாண்டு உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிரது. சார்வரி ஆண்டு நிறைவடைந்து, பிலவ தமிழ்ப் புத்தாண்டு தொடங்கியுள்ளது.

சித்திரை திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் முறையான கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி சாமி தரிசனம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு தலைவர்களும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோர் இன்று காலையே தமிழ்ப் புத்தாண்டு தின வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில். உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டரில், உலகெங்கிலும் வாழும் எங்கள் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு நம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்! என்று தனது புத்தாண்டு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதேபோல மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் தனது ட்விட்டரில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்,












Click it and Unblock the Notifications