டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்
டெல்லி: அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியுடன், டீசல் கார்கள் விற்பனையை முழுமையாக நிறுத்திவிடுவதாக அறிவித்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம்.
இந்தியாவின் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுசுகி. விற்பனையில் எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருப்பது இந்த நிறுவனம்தான்.
மாருதி சுசுகி வர்த்தக மற்றும் தனிநபர் பயன்பாட்டுக்காக, பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருளை கொண்டு இயங்கும் வாகனங்களை தயாரித்து வருகிறது. இதில் டீசல் கார்கள் விற்பனை 23% என்ற அளவில் உள்ளது.

கார்கள் வகைகள்
அதிக தூரம் கார்களை இயக்க வேண்டியிருப்போரும், வாடகை கார்களை இயக்குவோரும் டீசல் கார்களை வாங்குவது வழக்கம். குறைந்த அளவிலான தனி நபர் பயன்பாடு, சொந்த பயன்பாடுகளுக்காக கார் வாங்குவோர் பெட்ரோல் கார்களை வாங்குவார்கள். இந்த நிலையில்தான், 2020ம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல், டீசல் கார்களை விற்பனை செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது, மாருதி சுசுகி நிறுவனம். அதன் தலைவர் ஆர்.சி.பார்கவா இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

டீசல் இன்ஜின்கள்
ஸ்விப்ட், பலேனோ, எர்டிகா, டிசையர், சியாஸ், விடாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ் ஆகிய கார் மாடல்களில் டீசல் இன்ஜினும் கிடைக்கிறது. பெரும்பாலான வாடகை கார் ஓட்டுநர்களும், டீசல் கார்களையே விரும்புகிறார்கள். அப்படியிருந்தும், துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளது மாருதி சுசுகி.

சுற்றுச்சூழல்
இதற்கு முக்கியமான காரணம், BS-VI சுற்றுச்சூழல் விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதுதான். சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப டீசல் இன்ஜின்களை தயாரிக்க அதிக செலவு பிடிக்கும். பொதுவாக டீசல் இன்ஜின்கள் அதிக சத்தமும், அதிக புகையும் கக்க கூடியவை. இதில் BS-VI விதிமுறைகளுக்கு உட்பட்டு டீசல் இன்ஜின்களை தயாரிப்பது இன்னும் கடினமான பணி என்பதுதான் மாருதி சுசுகியின் இந்த முடிவுக்கு காரணம்.

முதலீடு தீவிரம்
ஆனால், வருங்காலத்தில், புதிய சுற்றுச்சூழல் விதிமுறைக்கு உட்பட்டு, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் திரும்ப அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அது எப்போது என்பது இப்போதைக்கு தெரியாது. இந்த பணிகளுக்காக மாருதி சுசுகி ரூ.1000 கோடியை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications