மேகதாது பற்றி இங்கே பேசக்கூடாது.. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிரடி
டெல்லி: மேகதாது விவகாரத்தை, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆலோசிக்க கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய 3வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமை வகித்து வருகிறார்.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உட்பட்ட தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின், பிரதிநிதிகளாக, நீர்வளத்துறை உயர் அதிகாரிகள், இதில் பங்கேற்றுள்ளனர்.

காவிரி ஆணைய கூட்டம்
கர்நாடக அரசு அளித்துள்ள மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை குறித்த விவாதத்தை, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பொருள் நிரலாக சேர்த்ததற்குக் தமிழக அரசு இக்கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விசாரிக்க கூடாது என்பது தமிழக அரசு வாதமாக இருந்தது.

விரிவான திட்ட அறிக்கை
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கர்நாடக அரசு அளித்துள்ள மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை குறித்த விவாதத்தை இக்கூட்டத்தில் ஒரு பொருள் மேலாக சேர்க்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

தமிழக அரசு வலியுறுத்தல்
மேகதாதுவில் அணை கட்டும் திட்டம், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையையையும் மற்றும் 16. 2.2018 ஆம் நாளிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பினையும், மீறும் செயலாக உள்ளதால், இப் பொருள் குறித்த கூட்ட நிகழ்ச்சி நிரலை திரும்பப்பெற வேண்டும். இனிவரும் காலங்களில் நடைபெறும் கூட்டங்களிலும், இப்பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேட்டூர் அணை
அடுத்த பாசன பருவம் ஜூன் மாதம் 1ம் தேதி துவங்க உள்ளது. காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் விடுவிப்பதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஜூன் மாதத்தில் தமிழ்நாடுக்கு உரிய 9.2 டிஎம்சி அடி நீரையும், மற்றும் அதன் பிறகு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி எவ்வித குறைபாடும் இன்றி ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு நீரை விடுவிக்க ஆணையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உடனடியாக விடுவியுங்கள்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையில் ஒவ்வொரு மாதமும் 2.5 டிஎம்சி அடி நீர் வீதம், தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முழுமையாக அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள குறைபாடு நீரான 2 டிஎம்சி அடி நீரை, மே மாதத்திற்குள் உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை கூட்டம் ஏற்று கொண்டால் நீண்ட நாட்களுக்கு மேகதாது பிரச்சனையில் இருந்து தமிழகம் தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications