நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு - மத்திய அரசு
டெல்லி: நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video

இந்தியாவில் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தினந்தோறும் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. சில இடங்களில் உருமாறிய கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில் இந்த மாதத்துடன் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் கொரோனாவின் புதிய பாதிப்பை கருத்தில் கொண்டு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் பழைய பாதிப்புகளில் கணிசமான சரிவு இருக்கும் நிலையிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பது அவசியமாகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தவும் நோய் பரவாமல் தடுக்கவும் தடுப்பூசி போடும் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி வெளியான நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications