மிஷன் இன்னும் முடியவில்லை.. காஷ்மீரிலேயே இருங்கள்.. அஜித் தோவலுக்கு அமித் ஷா அறிவுரை.. என்ன திட்டம்?
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை காஷ்மீரில் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார்.
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை காஷ்மீரில் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுத்தி உள்ளார்.
கடந்த வாரம் காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.
இதையடுத்து இந்தியாவுடன் அனைத்து விதமான உறவுகளையும் நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் இனி எந்த விதமான உறவும் கிடையாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆலோசகர்
இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தற்போது காஷ்மீரில் இருக்கிறார். அவர் கடந்த மூன்று நாட்களாக காஷ்மீரில் மக்களை சந்தித்து பேசி வருகிறார். காஷ்மீரில் அவர் மக்களோடு மக்களாக பிரியாணி சாப்பிடும் புகைப்படங்கள் கூட வெளியானது.

அஜித் தோவல் ஏன்
இந்த நிலையில் அஜித் தோவல் கண்டிப்பாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் வரை, காஷ்மீரில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, அஜித் தோவலை காஷ்மீரிலேயே இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். அவர் அங்கு இருப்பதுதான் பிரச்சனைகளை சரி செய்ய நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் என்ன
காஷ்மீரில் ஆகஸ்ட் 15ம் தேதி பெரிய அசம்பாவிதங்கள் ஏதாவது நடக்க வாய்ப்புள்ளது. அதேபோல் இன்று நடக்கும் பக்ரீத் விழாவிலும் அங்கு பிரச்சனைகள் ஏதாவது எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அஜித் தோவல் காஷ்மீரில் இருப்பதுதான் சரி என்று மத்திய அரசு கருதி வருகிறது.

எப்போது வரை
ஆகஸ்ட் 15ம் தேதி வர எந்த விதமான அசம்பாவிதமும் நடக்க கூடாது. காஷ்மீரில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை சரியாக முறையில் கொண்டாட வேண்டும். அதனால், அஜித் தோவல் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications