'ஜோதிராதித்யா' எனும் நான்.. மீண்டும் மத்திய அமைச்சரான சிந்தியா.. அரச குடும்ப பின்னணி! யார் இவர்?
டெல்லி: மத்திய பிரதேசத்தின் குணா லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதிராதித்ய சிந்தியா, மோடியின் 3.0 விலும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரை ஆட்சி செய்த சிந்தியா என்ற மராத்திய அரச குடும்பத்தின் வாரிசு ஜோதிராதித்ய சிந்தியா ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு குவாலியர் அரச சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. குவாலியர் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜா ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையான மாதவ்ராவ் சிந்தியா இருந்தார். இப்போதும் முடிசூடா மன்னராக அந்தப் பகுதி மக்களால் மதிக்கப்பட்டு வருகிறார்.

ஜோதிராதித்ய சிந்தியா 2001-ல் அவரது தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அடுத்த ஆண்டே நடைபெற்ற தேர்தலில் தங்கள் குடும்பத்தின் பாரம்பரியாக வென்ற குணா தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் 4.5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். அடுத்த சில ஆண்டுகளில் அவரை மத்தியப் பிரதேச காங்கிரஸின் முகமாக ஜோதிராதித்யா சிந்தியா மாறினார்.
2007-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி., துறை இணை அமைச்சராக இருந்தார். 2009-ஆம் ஆண்டு மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை , 2012-ஆம் ஆண்டு மின்சார துறை அமைச்சர் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ஆனால் மத்திய பிரதேசத்தில், 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பெரும் பாடு பட்டு ஜோதிராதித்ய சிந்தியா வெற்றி பெற வைத்தார்.
ஆனால், கமல்நத்திற்கு கட்சி மேலிடம் முதல்வர் பொறுப்பை கொடுத்ததை ஜோதிராதித்ய சிந்தியாவால் ஏற்க முடியவில்லை. இதையடுத்து, பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைய சிந்தியாவின் பங்கு பெருமளவில் இருந்தது. இதற்கு கைமாறாக மத்திய அமைச்சர் பொறுப்பை சிந்தியாவுக்கு கொடுத்தது. தற்போது புதிய அமைச்சரவையிலும் சிந்தியாவுக்கு பதவி கொடுத்துள்ளது கட்சி மேலிடம்.
மோடியின் முந்தைய அமைச்சரவையில் ஜோதிராதித்ய சிந்தியா சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். மூன்று ஆண்டுகள் இந்த பொறுப்பை வகித்துள்ளார். மோடியின் புதிய அமைச்சரவையில் அவருக்கு எந்த பொறுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications