Modi and Zelenskyy: போரை நிறுத்த அனைத்து உதவியையும் இந்தியா செய்யும்.. உக்ரைனுக்கு பிரதமர் மோடி உறுதி
டெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதில், உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடி வாக்குறுதியளித்திருக்கிறார்.
போரை முடிந்தவரை விரைவாகவும், அமைதியான முறையிலும் நிறுத்த வேண்டும் என்றும், உக்ரைன் உடனான உறவுகளை மேம்படுத்த இந்தியா உறுதியாக இருப்பதாகவும் மோடி கூறியிருக்கிறார்.

இந்த உரையாடல் குறித்த தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, "அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசியதில் மகிழ்ச்சி. சமீபத்திய நிலவரங்கள் குறித்த அவரது கருத்துக்களை கேட்டறிந்தேன். இப்போரை விரைவாகவும் அமைதியாகவும் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நான் எடுத்துரைத்தேன். இது தொடர்பாக சாத்தியமான அனைத்து பங்களிப்புகளையும் செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது. அத்துடன், உக்ரைனுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா உறுதியாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.
சமீபத்தில்தான் ரஷ்ய அதிபர் புதியனுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார். இந்த தொலைபேசி உரையாடலின் போது உக்கரை நிலவரம், உக்ரைன் தொடர்பான இதர விவரங்கள் குறித்து மோடிக்கு புதின் விளக்கி இருந்தார். மறுபுறம் போர் பற்றி இந்தியாவின் நிலைப்பாடு, அமைதியான முறையில் போர் முடிவடைய வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
இப்படி இருக்கையில் உக்ரைன் அதிபருடன் மோடி பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. சர்வதேச அளவில் அமெரிக்க ஆதரவு நாடுகள், ரஷ்ய ஆதரவு நாடுகள் என இரு தரப்பாக உலக நாடுகள் பிரிந்து இருக்கின்றன. இதில் இந்தியா, அமெரிக்க தரப்பாகவே ஆரம்பத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் மேற்கு நாடுகளுக்கும்-கிழக்கு நாடுகளுக்கும், அதாவது அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கும், ரஷ்ய ஆதரவு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் இந்த நல்லுறவு முயற்சி என்பது எதிர்பார்த்த அளவுக்கு பலனை கொடுக்காது என அரசியல் விமர்சகர்கள் எச்சரித்து வருகின்றனர். அவர்கள் எச்சரித்ததை போலவே, இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை போட்டு லாக் செய்துவிட்டது.
அமெரிக்காவுக்கு சப்போர்ட் செய்து தான் போரை நிறுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும் கூட அமெரிக்கா இதையெல்லாம் கண்டுக்காமல் 50% அளவுக்கு வரியை போட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் உக்ரைனிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பது சர்வதேச அரசியலில் கவனம் பெற்று இருக்கிறது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications