Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi and Zelenskyy: போரை நிறுத்த அனைத்து உதவியையும் இந்தியா செய்யும்.. உக்ரைனுக்கு பிரதமர் மோடி உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதில், உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடி வாக்குறுதியளித்திருக்கிறார்.

போரை முடிந்தவரை விரைவாகவும், அமைதியான முறையிலும் நிறுத்த வேண்டும் என்றும், உக்ரைன் உடனான உறவுகளை மேம்படுத்த இந்தியா உறுதியாக இருப்பதாகவும் மோடி கூறியிருக்கிறார்.

Modi Zelenskyy Ukraine

இந்த உரையாடல் குறித்த தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, "அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசியதில் மகிழ்ச்சி. சமீபத்திய நிலவரங்கள் குறித்த அவரது கருத்துக்களை கேட்டறிந்தேன். இப்போரை விரைவாகவும் அமைதியாகவும் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நான் எடுத்துரைத்தேன். இது தொடர்பாக சாத்தியமான அனைத்து பங்களிப்புகளையும் செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது. அத்துடன், உக்ரைனுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா உறுதியாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில்தான் ரஷ்ய அதிபர் புதியனுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார். இந்த தொலைபேசி உரையாடலின் போது உக்கரை நிலவரம், உக்ரைன் தொடர்பான இதர விவரங்கள் குறித்து மோடிக்கு புதின் விளக்கி இருந்தார். மறுபுறம் போர் பற்றி இந்தியாவின் நிலைப்பாடு, அமைதியான முறையில் போர் முடிவடைய வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.

இப்படி இருக்கையில் உக்ரைன் அதிபருடன் மோடி பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. சர்வதேச அளவில் அமெரிக்க ஆதரவு நாடுகள், ரஷ்ய ஆதரவு நாடுகள் என இரு தரப்பாக உலக நாடுகள் பிரிந்து இருக்கின்றன. இதில் இந்தியா, அமெரிக்க தரப்பாகவே ஆரம்பத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில் மேற்கு நாடுகளுக்கும்-கிழக்கு நாடுகளுக்கும், அதாவது அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கும், ரஷ்ய ஆதரவு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் இந்த நல்லுறவு முயற்சி என்பது எதிர்பார்த்த அளவுக்கு பலனை கொடுக்காது என அரசியல் விமர்சகர்கள் எச்சரித்து வருகின்றனர். அவர்கள் எச்சரித்ததை போலவே, இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை போட்டு லாக் செய்துவிட்டது.

அமெரிக்காவுக்கு சப்போர்ட் செய்து தான் போரை நிறுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும் கூட அமெரிக்கா இதையெல்லாம் கண்டுக்காமல் 50% அளவுக்கு வரியை போட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் உக்ரைனிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பது சர்வதேச அரசியலில் கவனம் பெற்று இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+