இதை இட்லின்னு சொன்னா.. சட்னி கூட நம்பாது.. பிரஸ் மீட்டில் மோடி அமைதி.. வம்பிழுத்த நெட்டிசன்ஸ்!
செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி அமைதியாக வேடிக்கை பார்த்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி அமைதியாக வேடிக்கை பார்த்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை பலர் விமர்சித்து வருகிறார்கள்.
லோக்சபா தேர்தல் திருவிழா ஒருவழியாக முடிவிற்கு வந்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 5 வருடத்தில் முதல்முறை மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார்.
அமித் ஷாவிடம் கேளுங்கள்.. என்னிடம் கேட்காதீர்கள்.. ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி!
பேசவில்லை
செய்தியாளர்கள் சந்திப்பில் முதலில் அமித் ஷாதான் பேசினார். அமித் ஷாவை தொடர்ந்து மோடி பேசினார். ஆனால் பிரதமர் மோடி எந்த விதமான கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. மிக சாதாரண கேள்விக்கு கூட மோடி பதில் அளிக்கவில்லை. மோடி தொடக்கத்தில் பேசிய பின் அமைதியாக இருந்தார்.
கடும் விமர்சனம்
இந்த நிலையில் மோடியின் இந்த பேட்டி பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. மோடி எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்பதால் பலரும் மோடியின் பேட்டியை கிண்டல் செய்தனர். 5 வருடத்தில் முதல்முறை இப்படி பேட்டி கொடுப்பதற்கு கொடுக்காமலே இருந்திருக்கலாம் என்று பலர் விமர்சனம் வைத்தனர்.
|
ஏன் இப்படி
மோடி நடத்தியதற்கு பெயர் பிரஸ் மீட் கிடையாது.. அவர் வெறுமனே செய்தியாளர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். அவ்வளவுதான், என்று இவர் கூறியுள்ளார்.
|
மிக மோசம்
இவர், 70 வருட இந்திய வரலாற்றில் பிரதமர் ஒருவர் கேள்விகளையே எதிர்கொள்ளாமல் பேட்டி அளித்தது இதுதான் முதல்முறை என்றுள்ளார்.
|
இது இல்லை
இவர், அப்படி என்றால் இதற்கு பெயர் கண்டிப்பாக செய்தியாளர் சந்திப்பே கிடையாது என்று கூறியுள்ளார்.
|
இதுக்கு பேர் மீட்டா
இவர், மோடி ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாம எஸ்கேப் ஆகிட்டார்.. இதுக்கு பேர் பிரஸ் மீட்டா... இதெல்லாம் இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது!, என்று கிண்டல் செய்துள்ளார்.
|
கெத்து
முடிஞ்ச். கடைசி வரை மோடி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை என்பதை கூறி அமர்கிறேன்.... ஒரு கேள்விக்கும் நம்மாளு கடைசிவரை பதில் சொல்லல, என்று இவர் கூறியுள்ளார்.